சசிகலாவின் அப்பட்டமான விதிமீறல்கள் 117 நாட்களில் 82 பேருடன் சந்திப்பு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டு இருப்பதும், இதற்காக டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் உதவியாளர் பிரகாஷ், தில்லி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த 5 மாதமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
