தற்போது சென்னையை பாடாய் படுத்தும் மழைக்கு என்ன காரணம்? அதே நேரத்தில் என்ன வெயிலு... என்ன வெயிலு கொளுத்துப்பா...இப்படி நாம் அடிக்கடி புழம்புகிறோம்.மே மாத கடைசியோடு முடிய வேண்டிய வெயிலின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது.அதே போல மார்கழி, தை குளிர்காலமும் வழக்கத்தை விட கடும் குளிராக மாறி கொண்டுவருகிறது. மேலும் மழை துவங்கியதுமே டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவத்தொடங்கி உயிர் பலி வாங்குகிறது. வரும் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான அளவில் பரவும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.புளோரிடா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டிரேக் கூமிங்ஸ் என்ற ஆய்வாளர் வெப்பமான பருவநிலை மாற்றத்தினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச்சேர்ந்த 8 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார். 1997லிருந்து இந்த எட்டு நாடுகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடுத்து ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக நோய்கள் பரவிவருகின்றன.
கடற்கரை கிராமங்களை கொஞ்சம் ,கொஞ்சமாக கடல் விழுங்கி வருகிறது.
எதிர்பாராத வறட்சி, வெள்ளம் ,புயல் அதனால் பாதிக்கப்படும் விவசாயம்.... இப்படி நிறைய பாதிப்புகள் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் ? நாம் வாழும் பூமிக்கு காய்ச்சல் வந்து விட்டது தான்..
