பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

உங்க எல்லோரையும் ரேப் பண்ணிடுவேன்!’

ஒரு பெண்ணின் மார்பைப் பிடிச்சு அமுக்கி, வக்கிரத்துடன் எஸ்.ஐ.ரவி சிரிச்சார். அதை எதிர்த்துக் கேட்டதால், எல்லா தோழர்களையும் போலீசார் அடிச்சு நொறுக்கினாங்க. எங்களை போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு ஒரு திருமண மண்டபத்துல அடைச்சு வெச்சு கொடூரமா சித்ரவதை செஞ்சாங்க. ஒருத்தரை 20 போலீசார் சூழ்ந்துகிட்டு லத்திகள் நொறுங்குற வரை அடிச்சாங்க. இப்பவும் போலீஸ் என்னை “பாலோ பண்ணிக்கிட்டே இருக்கு” என்று அச்சம் குறையாமல் பேசுகிறார் இளம்பெண் சுசி.மத்திய அரசின் ‘செல்லாக்காசு’ திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மேடவாக்கத்தில் டிசம்பர் 31ம் தேதி போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்தப் போராட்டத்தில்தான், போலீசார் கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர்.அதில், போலீசாரின் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண், “அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்துச்சு.
திடீரென, டிராஃபிக் ஜாம் ஆவதாக போலீஸ்காரங்க பொய்யாகச் சொன்னாங்க. அப்புறம், போராட்டத்துல கலந்துகிட்ட பெண்களை ஆபாசமாத் திட்டினாங்க. ஒரு பெண்ணோட மார்பை பிடிச்சப்போ, ‘ஏன் இப்படி மோசமா நடந்துக்கிறீங்க’னு தோழர்கள் கேட்டாங்க. உடனே, எல்லோரையும் கண்மூடித்தனமா தாக்க ஆரம்பிச்சுட்டாங்க, எட்டுத் தோழர்களை ஒரு வேனில் ஏத்திக்கிட்டு, வேனின் கதவு, ஜன்னலை மூடிட்டு அவங்களை காட்டுமிராண்டித்தனமா அடிச்சாங்க. எங்களை ஒரு திருமண மண்டபத்துல அடைச்சுவெச்சாங்க. அங்கே, சொல்றதுக்கு நாக்கூசும் அளவுக்கு ஆபாசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் போலீஸ்காரங்க நடந்துக்கிட்டாங்க.