Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

பெங்களூரு சிறை ரகசியங்கள் வெளியானது எப்படி?


சசிகலாவின் அப்பட்டமான விதிமீறல்கள் 117 நாட்களில் 82 பேருடன் சந்திப்பு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டு இருப்பதும், இதற்காக டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் உதவியாளர் பிரகாஷ், தில்லி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த 5 மாதமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

சசிகலா வெற்றிக்காக திருமங்கலத்தில் இடைத்தேர்தல்? 2009 பார்முலாவை கையிலெடுக்கும் அதிமுக



அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவிற்காக ஆள் ஆளுக்கு பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. (ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் நான் அரசியல் பார்முலா புகழ் திருமங்கலத்தை சேர்ந்தவன்)திருமங்கலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 2009
மதுரை: திருமங்கலம் சட்டசபை தொகுதி இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கி ஓட்டுக்களை பெற்றதுதான். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். உடல் நலக்குறைவினால் அவர் மரணமடையவே, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. 2009ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த திமுக, அப்போது அழகிரியின் மூலம் அரங்கேற்றிய அராஜகங்கள் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு சென்றது. இன்றைக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் திருமங்கலம் பார்முலா என்று பேசும் அளவிற்கு இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.