பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக் கப்படுகிற கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் 109 ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மையை, வேறுவழியின்றி தமிழகஅரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலத்தில் செயல்பட்டு வரும்ஈஷா மையத்தின் மிக பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்று சட்டவிரோதஆதிசிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடியும், அவருடன் விழாவில்பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக அரசே தன்னையும் அறியாமல் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.ஈஷா யோகா மையத்தால் 109 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவே ஈஷாமையம் சட்டவிரோதமானது என்பதைஅம்பலப்படுத்தும் விதத்தில் அமைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் இடைவிடாமல் அம்பலப்படுத்தி வந்தன.
