நான் வார ம் ஒரு சினிமா பார்ப்பவன் . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல திரில்லர் படம் பார்த்த திருப்பதியான படமாக தனியொருவன் அமைந்தது. படத்தின் ஹீரோவாக ஜெயம்ரவி இருந்தாலும் உண்மையில் தனியொருவன் அரவிந்த்சாமி தான் ஹீரோ. ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். கடைசிவரை அலட்டக்கொள்ளமல் அவர் செய்யும் வில்லதனம் புதுசு. இப்படி ஒரு மிக அழகான வில்லன் இந்திய சினிமாவில் இல்லை எனலாம்.
