Showing posts with label குடி. Show all posts
Showing posts with label குடி. Show all posts

இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மருத்துவர் கு.சிவராமன் -

30 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மது அருந்ததாத  இளைஞர்களை பார்ப்பது அரிது என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்
 1970களில் ரஷ்யாவில் ஆலம் ஆட்டா என்ற அறிவிப்பு வெளியானது. அதாவது ஹெல்த் ஃபார் ஆல் (அனைவருக்கும் சுகாதாரம்) என்ற கோஷத்தை அன்றைக்கு இருந்த ரஷ்ய அரசு (சோவியத் அரசு) இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. 1947ம் ஆண்டு இந்திய குடிமகனின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. தற்போது சராசரி ஆயுட்காலம் 64. அன்றைக்கு தொற்று நோய்களால் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தன. ஊழி என்ற காலரா, அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் தாக்குதலால் மக்கள் ஆயிரம், 2 ஆயிரம் பேர் என மடிந்தார்கள்.
ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்திற்கு தொற்று பரவி மனித இனம் அழிந்த காலமும் உண்டு. பிளேக் என்ற நோய் மக்களை ஆட்டிப்படைத்தது. இன்றைய தலைமுறை பிளேக் நோய் என்றால் என்ன என்று கேட்கிறது. ஆனால் இன்றைக்கு தொற்று இல்லாத நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோய், மாரடைப்பு, கேன்சர் போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் துரத்துகிறது.