தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்ட நிலையில், வடக்கும் (மத்திய அரசு) வஞ்சித்துவிட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வைரமுத்து விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள்மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது.வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும் பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக் கூடாது.
