பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label மதுரை பத்தககண்காட்சி. Show all posts
Showing posts with label மதுரை பத்தககண்காட்சி. Show all posts

நான் ஒரு கொலையாளியாக மாறியிருக்க வேண்டும். இயக்குநர் மிஷ்கின்

கடைசியாக எடுத்த படத்தால் 4.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நான் ஒரு கொலையாளியாக மாறியிருக்க வேண்டும். என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கூறினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது:
வாழ்க்கையில் சந்தோசமான நேரத்தைச் செலவிடுவது என்பது என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் படிக்கும் நேரம் தான். புத்தகத்தைப் படித்ததால் தான் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். நான் வீடு வாங்கவில்லை. 10 லட்சம்ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கியுள்ளேன். புத்தக மலைக்குள் ஒரு எலி போல், ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலச் சுற்றித்திரிகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி எனக்கு பாலமித்ரா, அம்புலி மாமா, முத்து காமிக்ஸ் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.