பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label ஐ.ஏ.எஸ். Show all posts
Showing posts with label ஐ.ஏ.எஸ். Show all posts

பிழைக்கத் தெரியாதவர்களால் பிழைக்கிறது இவ்வுலகம் -சகாயம்


தலைப்பைச் சேருங்கள்
உண்மையை பேசுவது மட்டும் தான் சத்தியமா? அநீதிக்கு எதிராய் ஆவேச குரல் எழுப்புவதும், ஏழைகள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, ஏழைகள் துயர் துடைக்க தீர்வு காண்பதும் சத்தியம் என்றே உணர்கிறேன். அதையே நான் முயற்சிக்கிறேன்.“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்” என்ற வாசகம் எனது அலுவலகத்தில், எனது பின்புற சுவரில் எழுதப்பட்டிருக்கும். 20 ஆண்டுகளில் 21 பணி மாறுதல்கள். அது பற்றி எனக்கு கவலையில்லை. இதுதான் நான். யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ள முடியாது.தேசம் முன்னேறியது என்று மும்பை, தில்லி ,சென்னை போன்ற நகரங்களை பார்த்து நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனது தேசத்தில் உள்ள கிராமங்களில் முழுமையாய் அடிப்படை வசதிகள் என்று சென்றடைகிறதோ? அன்று தான் என் தேசம் முன்னேறியதாக பொருள் கொள்ள முடியும். அதற்கான எனது பங்களிப்பு எனது முழு திறனுடன் தொடரும்.சத்தியம் என்பதற்கு உடனடி நீதி என்றும் பொருள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இயன்றவரை அதை செயல்படுத்தவே நான் விரும்புகிறேன்.