Showing posts with label உயிர்கடிகாரம். Show all posts
Showing posts with label உயிர்கடிகாரம். Show all posts

நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?


நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?இந்தகேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ...
நம் எல்லோருடைய உடலுக்குள் உள்ள கடிகாரம் பற்றி பார்க்கலாம்..

டிஜிட்டல் கடிகாரம்,   முட்களை கொண்ட கடிகாரம், இவற்றை போல தற்போது கூகுள் கடிகாரம் வந்திருக்கிறது.இந்த கடிகாரங்கள் நம் அன்றாட வாழ்க்கையை திட்டமிட உதவுகிறது. இதே போல மனிதர்கள் உட்பட மரங்கள்,விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது.அந்த கடிகாரம் தான் நம்மை,விலங்குகளை, மரம்,செடி ,கொடிகளையும் கட்டுப்படுத்துகிறது. நம்  அன்றாட செயல்பாடுகளை வழிநடத்துகிறது.

நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?

              இது கொஞ்சம் நகைசுவை கேள்வியாக தோன்றும்.... பகலில் வேலை செய்கிறோம், இரவில் தூங்குகிறோம்.இது என்ன கேள்வி?என கேட்க தோன்றும்... உங்களுக்கு மேலும் சில கேள்விகள்.
            விடிகாலையில் ஏன் சேவல் கூவுகிறது?சிட்டுக்குருவிகள் அதிகாலையில் எழுந்து  ஏன் இறைதேடப் புறப்படுகின்றன?கொசுக்கள் ஏன் இரவில் கடிக்கின்றன? பகலில் கடிப்பதில்லை.வௌவால்கள் இரவில் மட்டும் ஏன் வெளியே வருகின்றன?.