Showing posts with label மதவெறியர்கள். Show all posts
Showing posts with label மதவெறியர்கள். Show all posts

நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் பதிலடி

-
நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும், அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்-பரிவார் கூட்டம், நாடு முழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா.ஜ.க. எம்.பி.யும், இந்துத்துவ வெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை; மேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்று விஷத்தைக் கக்கினார்.

திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க கூடாது..ராமகோபாலன் மிரட்டல்

ரஜினிக்கும் நமக்கும் ஆயிரம் பிரச்சனையிருக்கலாம் ஆனால் இந்த படத்தில் நடிக்கலாம் ,நடிக்ககூடாது என சொல்ல ராமகோபாலன் யார்?
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து வீரம்செறிந்த போர்களை நடத்தி, மகத் தான தியாகம் செய்த திப்பு சுல்தான் பற்றிய திரைப்படத்தில்   ரஜினிகாந்த் நடிக்கக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ள மதவெறியர் களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?
இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் 10.9.2015 அன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கையில், ‘‘திப்பு சுல்தான் ஒரு இந்து மத விரோதி; தமிழர்விரோதி. அவரைப் பற்றி எடுக்கும் கன்னட திரைப்படத்தில் ரஜினி காந்த் நடிக்கக் கூடாது, தமிழ் திரைப்படைத்துறையினர் யாரும் அப்படத் திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது, ஒரு வேளை அப்படம் வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டால் அதை தமிழகத் தில் திரையிடக்கூடாது’’ என்று தெரிவித் துள்ளார்.

மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .