ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரன்...


ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல்காட்சி கார்கள் துரத்தி செல்லும் காட்சிகள்,  பனிச்சருக்கு , ஸ்கூட்டர் சேஸிங் காட்சிகள் என அசத்தலாக இருக்கும். அதே போல கடம்பன் படத்தில்  ஆர்யா தேன் எடுக்கும் காட்சி பிரமிப்பாக இருக்கி றது. மதுரையின் பல பெயர்களில் ஒன்ரு கடம்பவனம்.  வைகை நதிக்க ரையில் கடம்ப மரங்கள் அதிகமாக இருந்ததால் கடம்பவனம் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். அந்த பெயரில் இருக்கிற ஒரு மலைகிராமத்தில் நடக்கிற கதை.

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்! தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு நாட்டைத் திறந்து விட்ட மோடி அரசு



 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றியமைக்கப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.முதலில், நாட்டின் 5 நகரங்களில் மட்டும் இம்முறை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.இது மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
              பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. எண்ணெய் நிறுவனங்களும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களாகவே இருந்தன. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டு,

நீங்கள் மன அழுத்தம் உள்ளவரா?இல்லையா?



உலகில் 30 கோடி பேருக்கு மன அழுத்த இருக்கிறது.அதில் நீங்களும் ஒருவரா? எப்படி கண்டுபிடிப்பது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம்நாள் உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்தஆண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ‘மன அழுத்தம் நாம் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது. நோயின் அறிகுறியை பொறுத்து மிதமான மற்றும்தீவிரமான மன அழுத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  உலகில் 30 கோடி மக்கள் வயது, பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

தென்மேற்கு, வடகிழக்கைப் போல ‘வடக்கும்’ வஞ்சித்துவிட வேண்டாம்! கவிஞர் வைரமுத்து


தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்ட நிலையில், வடக்கும் (மத்திய அரசு) வஞ்சித்துவிட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வைரமுத்து விடுத்துள்ளார்.
          அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள்மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது.வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும் பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக் கூடாது.