Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .

ஒபாமா தாஜ் மகாலுக்கு போகாதது ஏன்?

கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பணக்காரர்களும் தலைகால் புரியாமல் அலைகிறார்கள். ஒபாமாவின் இந்திய வருகையால் பிஜேபி வகையாரக்கள் புள்ளரித்துபோய் திரிகிறார்கள். அமெரிக்காவுக்குள் மோடிக்கு  நுழைய தடைசெய்யப்படிருந்தது ஒருகாலம். இன்றைக்கு அமெரிக்காவே மோடியை தேடி வந்திருக்கிறது.எல்லாம் அமெரிக்க வியாபாரிகளுக்காகத்தான்.
அமெரிக்கா இந்தியாவில் உருவாக்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்ப்பட்டால் அமெரிக்கா பொருப்பல்ல என்பது உட்பட இந்தியாவுக்கு ஆபத்தான ஓப்பந்தம் போட்ப்பட்டுள்ளது.

"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" கோட்சேவின் நூல் வெளியீடு.

கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....  


கடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.