பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

இப்போதுதான் கள்ளநோட்டு புழக்கம் அதிகமாகி விட்டது!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக மோடி அரசின் புலனாய்வுப் பிரிவே அறிக்கை அளித்துள்ளது.கறுப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி, பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, ரொக்கப் பரிவர்த்தனையை குறைப்பது, தீவிரவாத நடவடிக்கை ஒழிப்பு என்று இதற்கு காரணம் கூறினார்.இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். பெரும் பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டது.பின்னர், புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. ஏடிஎம்-க்கள் காற்றாடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு மை இல்லை என்று நாசிக் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையம் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப் பாட்டின் பின்னணியில் சதி இருப்பதாக கூறி, பாஜக-வைச் சேர்ந்த மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கூறுகிறார். அந்த சதிகாரர்கள் யார்? என்பதை அவரும் கூறவில்லை; மத்திய பாஜக அரசும் கேட்கவில்லை. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்றுமட்டுமே நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறி வருகிறார்.இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ்நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டு களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு, மற்றொரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதி யாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரி மாற்றமும் அதிகரித்துள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. இதேபோல், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 400 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கைதெரிவிக்கிறது.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பொருளாதார அறிஞர்களும் பலர் கூறி வந்தனர். அதனை புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாக, ரிசர்வ் வங்கியே அண்மையில் புள்ளிவிவரம் வெளியிட்டது.
ரொக்கப் பரி வர்த்தனை குறைப்பேன் என்றுதான் மோடிகூறினார். ஆனால், பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிப்பும் மோடியின் மற்றொரு வாக்குறுதி. ஆனால், புலனாய்வு பிரிவு அறிக்கை மூலம் அதுவும் இல்லை என்றாகி இருக்கிறது. தீவிரவாத ஒழிப்புபற்றி தனியாக சொல்ல வேண்டிய தில்லை. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகுதான் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது. எனவே, அனைத்து வகையிலும் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதே இன்று உண்மையாகி இருக்கிறது.

தகவல் தீக்கதீர்



மோடியால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரழிவு


சுனாமி,பூகம்பம்,புயல்,எரிமலை வெடிப்பு உருவாக்கும் பேரழிவைபோல மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 உருவாக்கிய பேரழிவிலிருந்து இன்றும் மிள முடியால் இந்தியா முடங்கியுள்ளது.

ஈஷா ஆக்கிரமித்தது 109 ஏக்கர் குற்றவாளிக் கூண்டில் ஏறியது தமிழக அரசு


பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக் கப்படுகிற கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் 109 ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மையை, வேறுவழியின்றி தமிழகஅரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலத்தில் செயல்பட்டு வரும்ஈஷா மையத்தின் மிக பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்று சட்டவிரோதஆதிசிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடியும், அவருடன் விழாவில்பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக அரசே தன்னையும் அறியாமல் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.ஈஷா யோகா மையத்தால் 109 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவே ஈஷாமையம் சட்டவிரோதமானது என்பதைஅம்பலப்படுத்தும் விதத்தில் அமைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் இடைவிடாமல் அம்பலப்படுத்தி வந்தன.

ஆதிசிவனை திறக்க வராதீர் பிரதமரே! ஆன்மீகத்தின் பெயரால் சட்டவிரோதம்:


மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஈஷா மையத்தின் சார்பாக 112 அடி ஆதிசிவன் சிலை திற்கக்பப்ட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் முதல்வர்  பங்கேற்க உள்ளனர்.இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகிஉள்ளது.
ஆன்மீகத்தின் பெயரால் வனப் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதையும் பழங்குடியினர் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டதையும் விலங்குகளின் வாழ்நிலை சீர்குலைக்கப்பட்டதையும் அங்கீகரிக்கலாமா என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடதுசாரித் தலைவர்களும், நீதிபதி அரிபரந்தாமனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமரும் முதல் வரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 13 லட்சம் சதுர அடி பரப்பில் ஈஷாயோகா மையம் சார்பில் அதன் தலைவர் ஜக்கிவாசுதேவ் பல்வேறு கட்டடங்களை சட்டவிரோதமாகக் கட்டிவருவது பற்றிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற அரசாணையையும் அவர் மதிக்கவில்லை என்ற நிலையில், பிப்.24 அன்று இங்கு மகாசிவராத்திரி விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.இதுதொடர்பாக புதனன்று (பிப்.22) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிஅரிபரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் “ஒரு பகுதிமக்களின் ஆன்மிக விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம். மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கிறபோது, இந்த விழாவில் பிரதமரும் முதலமைச்சரும் பங்கேற்பது, விதி மீறல்களை அங்கீகரிப்பதாகிவிடும். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடத் தூண்டுவதாகிவிடும்,” என்று கூறினர்.

மரியாதைக்குரிய மோடிஜி அவர்களே!


நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .

பிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்

மோடி கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்ற பெயரில் தன் சொந்த பணத்தை எடுக்க பாமரமக்களை பாடாய்படுத்தி வருகிறார். பெரும் கருப்பு பண முதலைகள் சல்லாபித்திருக்க ஏழைகள் மட்டுமே துயரமடைகிறார்கள். இப்போது துல்லிய தாக்குதல் அடுத்ததாக வான்வழிதாக்குதல் தொடுத்திருக்கிறார்...
ரூபாய் நோட்டுகளை முற்றாக ஒழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களைஇன்னலுக்குள்ளாக்கிய பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். ஆனால் வெளியில் தனது சாதனை இதுவென்று மார்தட்டி வருகிறார்.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஞாயிறன்று அவர் உரையாற்றினார்.ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று நவம்பர் 8 ஆம்தேதி அறிவித்ததாகவும், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறிய அவர், இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும் என்றார்.ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.

இனி உங்கள் வருமானத்தை செலவழித்தே ஆக வேண்டும்!

மூட்டை மூட்டையாய் கட்டிப் பதுக்கி வைச்சிருக்கிறவனுக்கெல்லாம் இப்படித்தான்யா பாடம் புகட்டணும் என்று சிலஅறிவுஜீவிகளும், ‘தேசபக்திக்காரர்களும்’ சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கும், கறுப்புப் பண முதலைகளுக்கும், பெரும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவு யாரும் மறுக்கமுடியாத உறவாகும்.

சொந்த அரசியலைத்தாண்டிய இந்தப் பொருளாதார உறவுகள் நமது மக்களுக்குதெரியாத இரகசியங்களுமல்ல. அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உடனே அறிவிக்கப்பட்ட செயல் அல்ல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள்செல்லாத அறிவிப்பு. கடந்த ஆறு மாதமாய் திட்டமிடப்பட்டது என இப்போது, தகவல் கசிகிறது எனில் என்ன அர்த்தம்? பெருமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ளபணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே அர்த்தம்.ஏனெனில், கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ள அந்நிய மூலதனம் என்ற பெயரில் ஆயிரத்தெட்டு வழிமுறைகளை அரசே சட்டப்படி செய்துதருகிறது எனும்போது, அதனை செய்துகொள்வதுதானே சுலபமானது.

தமிழகம் வரும் மோடிக்கு ஒரு மடல்

பிரதமர் மோடி அவர்களுக்கு.... வணக்கம்.
தங்களுடைய இடையறாத வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையில் தமிழகத்தில் கோவை என்று ஒரு ஊர் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு வருகை தருவதற்கு நன்றி. நீங்கள் தேர்தலின் போது தமிழ் நாட்டிற்கு வந்து திருச்சியில் பேசினீர்கள். அப்போது உரையை துவக்கும் போது ‘வன்கோம்’ என்று செந்தமிழில் செப்பி யதை கேட்டு சுருண்டு விழுந்த தமிழ் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை. அடுத்து தங்கள் உரையில் வ.உ.சி இதே திருச்சியிலிருந்துதான் வேதாரண்யத்திற்கு உப்புக் காய்ச்ச புறப்பட்டார் என்று குறிப்பிட்டீர்கள் அல்லவா. அப்போதே தெரிந்து விட்டது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வரலாறை ஒரு வழி செய்யாமல் விடமாட்டீர்கள் என்பது. கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை துவக்கி வைக்கப் போவ தாகவும் அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் அறிந்தேன்.

இந்தியாவை அவமதிக்கும் மோடியின் பேச்சு - ட்விட்டரில் கொந்தளிப்பு

வெளிநாடு வாழ் இந்தியரே வருக வருக ன்னு யாருக்கு போர்ட் வச்சிருக்கீங்க..
நம்ம் பிரதமர் மோடிக்கு தான்... வார இதழ் ஒன்றில் நான் படித்த காமடி இது ...காமடி என்பதை விட  உண்மை .
தனது ஒராண்டு ஆட்சியில் 7 முறையாக வெளிநாடுகளில் சுற்றி கொண்டிருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரவே இந்த பயணம் என்கிறார். கடந்த ஓராண்டில் திட்டங்கள் பலவற்றை அறிவித்தார்களே  ஒழிய நடைமுறையில் அவை செயல்படுத்தபடவில்லை. கடைசியாக சுற்றுபயணம் போன சீனாவில் அவர் பேசிய பேச்சு  இந்திய மற்றும் வெளிநாட்டு இந்தியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தி இந்து தமிழில் வந்துள்ள தகவல்...

மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .

ஒபாமா தாஜ் மகாலுக்கு போகாதது ஏன்?

கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பணக்காரர்களும் தலைகால் புரியாமல் அலைகிறார்கள். ஒபாமாவின் இந்திய வருகையால் பிஜேபி வகையாரக்கள் புள்ளரித்துபோய் திரிகிறார்கள். அமெரிக்காவுக்குள் மோடிக்கு  நுழைய தடைசெய்யப்படிருந்தது ஒருகாலம். இன்றைக்கு அமெரிக்காவே மோடியை தேடி வந்திருக்கிறது.எல்லாம் அமெரிக்க வியாபாரிகளுக்காகத்தான்.
அமெரிக்கா இந்தியாவில் உருவாக்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்ப்பட்டால் அமெரிக்கா பொருப்பல்ல என்பது உட்பட இந்தியாவுக்கு ஆபத்தான ஓப்பந்தம் போட்ப்பட்டுள்ளது.

ஊழல் செய்த நபர் முதல்வராக யார் காரணம்?

ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை கேள்வி எழுப்பியுள்ளார். நியாய மற்ற நபர் நமது பிரதிநிதி யாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் நமது தேர்தல் முறையில் பெரிய குறை பாடு உள்ளது என்பதை யும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நிரூபிக்க வேண்டியது யார்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல் லாது என்று கூறி அதிமுக வினர் வாதம் செய்து வரு கின்றனர். மக்கள் சேவை யாற்றக் கூடியவர்கள் திடீ ரென சொத்துக்குவித்தால், முறையான ஊதியத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்க முடியுமா என்ற அளவுகோல்கள் உள்ளன. வங்கிக்கடன் மூலம் சொத் துக்கள் வாங்க ஆதாரங் களைக் காட்ட வேண்டும்.

இந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி?

காந்தியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவை தூய்மையாக வைக்க அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.நடிகர் கமல் ஹாசன்,டென்டுல்கர் , உள்ளிட்ட இந்திய பிரபல ங்களை தனது தூய்மை திட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.கமல் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக பேட்டி கொடுத் திருக்கிறார். நல்ல விஷயம் செய்யவேண்டிய காரியம் தான்.
         ஆனால் இந்தியர்க ளின் மனதில் இருக்கும் அருவருப்பான உண்மை யான அழுக்கை  எப்படி தூய்மைப்படுத்துவது.சாதிரீதியான,மதரீதியானா அழுக்கு அப்பிக்கிடக்கிடதே அதை எப்படி தூய்மை செய்வது.அதைத்தானே முதலில் தூய்மை படுத்தவேண்டும். அந்த அழுக்கை சுத்தம் செய்தால் இந்தியாவின் மற்ற  அழுக்குகள் சுத்தம் செய்வது எளிது.

மோடியின் 100 நாட்கள்...

திரைப்படங்களுக்குதான் 10வதுநாள், 25 வது நாள்,50வதுநாள்....100நாள் என் போஸ்டர் அடிப்பார்கள். இப்போது
அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியின் 100 வது நாளை விழாவாக கொண்டாடுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க. தனது 100 வது நாளை மிக கோலாகலமாக கொண்டாடியது. நாளிதழ்களில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தில் விளம்பரங்கள். புதிய திட்டங்கள்அறிவிப்பு. அந்த கட்சி தொண்டர்கள் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாடி முடித்துவிட்டார்கள். இப்போது மோடிக்கு 100வது நாள்...

மோடி வாய் மூடி இருப்பது ஏன்?


முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கருதப்படும் சம்பவங்கள் குறித்து நாட்டின் புதிய பிரதமர்நரேந்திர மோடி வாய் மூடி மௌனம் காத்து வருகிறார். நரசிம்ம ராவ் போபர்ஸ் ஊழல் குறித்தும், மன்மோகன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் குறித்தும் மௌனம்காத்தது போல் மோடி மதவன்முறைகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மௌனம் சாதித்து வருகிறார். .

காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி

ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளைக்கிணங்க, மத்திய உள்துறை அமைச்சகம் தூய்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு மாதத் திற்குள்ளாகவே சுமார் ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துவிட்டன ...’’ என்றுகுறிப்பிட்டிருந்தது. அது மேலும், “... (மத்தியஉள்துறை அமைச்சகம் அமைந்துள்ள) நார்த் பிளாக்கில் உள்ள ஸ்டீல் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்வையிட்டபோது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல கோப்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர்’’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆள்பிடிப்பு வேலயும் ....நாற்காலிச் சண்டைகளும்

அமையப்போவது மோடி அரசுதான் என்று கார்ப்ப ரேட் ஊடகங்கள் போட்டி போட் டுக்கொண்டு பிரச்சாரம் செய்துகொண்டிருக்க, மறுபுறம் பாஜகவுக்குள் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆட்சி கிடைத்தால் யாருக்கெல்லாம் முக்கிய பதவிகளை பங்குபோட்டுத் தரலாம் என்பது பற்றி கடுமையான சர்ச்சை நடந்து வருகிறது.

கடந்த காலங்களைப் போல தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தவறாகிவிட்டால் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.