பிரதான செய்திகள்
Showing posts with label தமிழக முதல்வர். Show all posts
Showing posts with label தமிழக முதல்வர். Show all posts

முதல்வர் அம்மா சொன்ன கதையும் சொல்லாத கதையும்...

தமிழகத்தில் ஏறிவரும் வெயில் சூட்டின் வேகத்தை விட தேர்தல் சூடு அதிகரித்துவருகிறது. 2 மாதங்கள் அலைந்து திரிந்து பொதுமக்களுக்கு ஜஸ் வைத்தால் போதும் 5 வருடங்களுக்கு கவலையில்லை.பணம், குவாட்டர்,ஜாதி,மதம் இப்படி எதைவைத்தாவது ஒட்டு வாங்கிவிட  எந்த கொள்கையும் இல்லாத கூட்டணி கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
                       தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தெருதெருவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சாரத்தில் சமீபகாலமாக குட்டிக்கதை சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இன்றைய முதல்வர்,நேற்றைய முதல்வர் எல்லோரும் கதைகளை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. அனைத்தும் காணொலி காட்சிதான். சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்த போது தனது தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு மட்டும் சென்ற மக்களை சந்தித்ததார். மழையில் நனைந்து கொண்டிருந்த பொதுமக்களிடம் கூட குட்டிகதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை மக்கள் நல கூட்டணி (வைகோ தலைமையிலான கூட்டணி) கார்ர்   கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார்.

பஸ் நிறுத்தம் சரியானதே...

24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள்,வருபவர்கள்  சந்திக்கிற இடம் மதுரை என்பதால்  24 மணி நேரமும் மாநகர டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
ஆனால் நேற்று மதுரை, மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையிலேயே குவிந்து கிடந்தார்கள்.குழந்தைகள் ,பெண்களுமாக அங்கும்,இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார்கள். சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்த மினிபஸ்கள், தனியார்  பஸ்கள்களில் தொங்கிய படியே பயணம் செய்தார்கள். அஞ்சலக தேர்வு எழுத முடியாமல் பலர்  சிரமப்பட்டார்கள். இன்னும் இது போல பல பிரச்சனைகள்.