வருடம் 365 நாட்களில் 280 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயில்லில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். இலக்கிய சந்திப்புகள்,பட்டிமன்ற ங்கள்,சொற்பொழிவுகள் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் இடம் மதுரை.ஏற்கனவே அக்டோபர் 26 வலைப்பதிவர் திருவிழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே தமிழர்களின் பண்பாட்டை,கலாச் சாரத்தை,மொழியை முன் வைத்து பசுமைநடை அமைப்பு 40வது பயணத்தை பாறைத்திருவிழாவாக கொண்டாடுகிறது.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை தமிழர்களின் பண்பாட்டுத்தலைநகரமாக விளங்கி வருகிறது.மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக குகை ஓவியங்கள், தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள்,சங்க இலக்கியங்கள்,நாட்டுப்புற பாடல்கள்,வடமொழி மற்றும் பிறநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் திகழ்கின்றன.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை தமிழர்களின் பண்பாட்டுத்தலைநகரமாக விளங்கி வருகிறது.மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக குகை ஓவியங்கள், தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள்,சங்க இலக்கியங்கள்,நாட்டுப்புற பாடல்கள்,வடமொழி மற்றும் பிறநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் திகழ்கின்றன.
