காவியத்தலைவன் கலக்கல் படம்...

நீங்கள் ரசனையான சினிமா ரசிகராக இருந்தால் நிச்சயமாக இந்த படம் பிடிக்கும்.ஏனென்றால் சினிமாவை பெற்றெடுத்த தாய் நாடகக்கலைதானே.தமிழ் சினிமா தொழில்நுட்பம்,கேமிரா டெக்னிக்,வெளிநாட்டு படப்பிடிப்பு,எடிடிங், இப்படி அசுரத்தனமா வளர்ச்சி கண்டிருக்கிறது.இசை ஞானமே இல்லாதவன்கூட இசையமைக்கலாம். இசை கணிணிமாயமாக்கபட்டதால் இசை இப்போது எளிது.சிவந்த தேல்,கொஞ்சம் கவர்ச்சி இருந்தால் போதும் நடிகையாகி விடலாம்.குறிப்பாக தமிழ் பேச தெரியவிட்டாலும் பரவாயில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்து பேசி கொள்ளலாம். நடிகர்கராக வேண்டுமா? சொந்தமாக படம் தயாரிக்க முடியுமானால் நீங்களும்,நானும் நடிகராகிவிடலாம்.நடிக்க தெரிந்திருக்க வேண்டி அவசியமில்லை.

பிழைக்கத் தெரியாதவர்களால் பிழைக்கிறது இவ்வுலகம் -சகாயம்


தலைப்பைச் சேருங்கள்
உண்மையை பேசுவது மட்டும் தான் சத்தியமா? அநீதிக்கு எதிராய் ஆவேச குரல் எழுப்புவதும், ஏழைகள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, ஏழைகள் துயர் துடைக்க தீர்வு காண்பதும் சத்தியம் என்றே உணர்கிறேன். அதையே நான் முயற்சிக்கிறேன்.“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்” என்ற வாசகம் எனது அலுவலகத்தில், எனது பின்புற சுவரில் எழுதப்பட்டிருக்கும். 20 ஆண்டுகளில் 21 பணி மாறுதல்கள். அது பற்றி எனக்கு கவலையில்லை. இதுதான் நான். யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ள முடியாது.தேசம் முன்னேறியது என்று மும்பை, தில்லி ,சென்னை போன்ற நகரங்களை பார்த்து நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனது தேசத்தில் உள்ள கிராமங்களில் முழுமையாய் அடிப்படை வசதிகள் என்று சென்றடைகிறதோ? அன்று தான் என் தேசம் முன்னேறியதாக பொருள் கொள்ள முடியும். அதற்கான எனது பங்களிப்பு எனது முழு திறனுடன் தொடரும்.சத்தியம் என்பதற்கு உடனடி நீதி என்றும் பொருள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இயன்றவரை அதை செயல்படுத்தவே நான் விரும்புகிறேன்.

திருப்பதி கோவிலின் மறுபக்கம்



திருப்பதிக்கு நீங்கள் சென்றிருந்தால், முடிவில்லாத நீண்ட வரிசையில் வந்து செல்லும் யாத்திரிகர்களை அக் கோவிலின் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பான முறையில் நிர்வகிப்பதனைப் பார்த்துவியப்படைந்திருப்பீர்கள். இக்கோவி லுக்கு நாள்தோறும் 40,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கிறது.இங்கு வரும் பக்த கோடிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மிகவும் பிரத்யேக மானவை ஆகும்.

ரஜினி வருவாரா, வர மாட்டாரா?

கேள்வி: அன்புள்ள டான். ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி?
பதில்: ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். அப்போது நான் பிறந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டே என் அப்பா பக்கத்து வீட்டு மாமாவிடம் ரஜினி அரசியலுக்கு வருவாரா எனத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அதற்கு முன் என் அப்பாவைத் தொட்டிலில் ஆட்டியபோது என் தாத்தாவும் இதே பிரச்சினையைப் பேசிக்கொண்டிருந்ததாக தாத்தா பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் சளைத்தவன் அல்ல.

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கென்று அனை த்து வகையான பிரச்சனைகள், நோய்களுக்கும் சிகிச்சைஅளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனையாக டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை சென்னையில் வடபழனியில் துவங்கப்படுகிறது. ஆண்கள் மருத்துவத்தில் வல்லமை பெற்றவரும், உலக பாலியல் மருத்துவர் சங்க பொதுச்செயலாளருமான பேராசிரியர் டாக்டர் பி.கணேசன்அடைக்கண் இம்மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.இதுகுறித்து மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:குழந்தைகள் மருத்துவம், பெண்கள் மருத்துவம் ஆகியவற்றுக்கென்று சிறப்பு மருத்துவமனைகள் பல இடங்களில் உள்ளது. ஆனால், ஆண்களின் உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்தும்விதமாக ஆண்களுக்கென்று பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமனை உலகில்எங்குமே கிடையாது.

முதல் முறையாக வால்நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஆய்வுக் கலம் -வீடியோ

விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முதல்முறையாக, வால்நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கும் முயற்சியின் இறுதிக் கட்டத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ரொசெட்டோ விண்கலத்திலிருந்து, 67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தில் தரையிறக்குவதற்காக ஃபைலி ஆய்வுக்கலம் தனியே பிரிக்கப்பட்டுவிட்டது.

ரொசெட்டோ

ரொசெட்டா என்பது ஐரோப்பிய விண்வெளி மையத்தால், வால் நட்சத்திரம் ஒன்றை ஆய்வதற்காக தொடங்கப்பட்ட 12 ஆண்டுகாலத் திட்டமாகும். ரொசெட்டா விண்கலம் 2004- ஆண்டு மார்ச் 2-ம் தேதி ஆரியாயன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. ரொசெட்டா விண்கலத்தில், ஃபைலி என்ற தரையுலவி இணைக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவுடன் லிஃப்டில் ஒருநாள்...

ஒபாமாவை சந்திக்க    உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? இந்த வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அதுவம் லிஃப்டில் அருகருகே நின்றபடியே பேசும் வாய்ப்பு.....
     கட்டுமான தொழிலாளியாகவும், குற்றவாளிகளை திருத்தும் அதிகாரியாகவும் அமெரிக்காவில் பல்லாண்டுகள் பணிபுரிந்த கென்னத் டே(47) ஆண்டுக்கு 42,000 டாலர் ஊதியத்தில் அட்டலாண்டா நகரில் உள்ள நோய் தடுப்பு,கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை கிடைத்த போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.அவருடைய வாழ்க்கையிலேயே முக்கியமான நாள் 7 வாரங்களுக்கு முன்னாள் வந்தது. "எபோலா குறித்து நேரில் அறிய மையத்து வருகை தரும் அதிபர் ஒபாமாவை நீங்கள் தான் அருகிலிருந்து அழைத்து வரவேண்டும்".என்று நிர்வாகம் டேட்டிடம் கூறியது.

கொலைகாரனும்...ரவுடியும் எப்படி உருவாகிறார்கள்?

கள்ளக்காதல் விவகாரம்,அரசியல் கொலைகள்,பெண் கற்பழிப்பு,சாதியமோதல் கள்,மதவெறி.... தினசரி நாளிதழ்களை புரட்டினால் அதிக பக்கங்களை அடை த்துக்கொண்டுருக்கிற செய்திகள் மேற்கண்டவை தான். இதற்கெல்லாம் சுழ்நிலை ஓரு காரணம் என்றால் ,மற்றொரு காரணம் கொலைகாரன்,அல்லது ரவுடியின் மரபணுவும் எனகண்டுபிடித்திருக்கிறார்கள்.

மனிதனின் குறிப் பிட்ட இரண்டு மரபணுக்களுக்கும் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக் கும் இடையில் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பின்லாந்தில் வன்முறைமிக்க குற்றங்களைச் செய்த தாக கண்டறியப்பட்ட தொள்ளாயிரம் பேரின்மரபணுக்களை ஆராய்ந்த போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.குறிப்பிட்ட இந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ் நாளில் திரும்பத் திரும்பவன்முறையில் ஈடுபட்டிருந் ததற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.