பிரதான செய்திகள்

80-வது சுதந்திர தினமும்..காந்தியின் உண்ணாவிரதமும்

 

80வது சதந்திரதினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தில், கண்ணீரில் எழுதப்பட்டது. கட்டபொம்மன்,மருதுசகோதர்கள்,வேலுநாச்சியார் துவங்கி மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சர்தார் வல்லபாய் படேல் என பல்லாயிரம் தலைவர்களின் தியாகத்தால் கிடைத்தது.200 ஆண்டுகலா போராட்டம் இது.

 இவர்கள் மட்டுமல்ல முகம் தெரியாத பல தலைவர்களின் தியாகுமும் உண்டு. உதாரணாக 1919 ஏப்ரல் 13, ஜாலியன் வாலாபாக். அந்த தோட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு, அதிகாரப்பூர்வ கணக்குப்படி 379 பேரும், காங்கிரஸ் மற்றும் தனியார் மதிப்பீட்டின்படி 1000-த்திற்கும் மேற்பட்டோரும் பலியானார்கள்.

பாரதிராஜா: தமிழ்க் கிராமத்தின் கடைசி காட்சிப்பதிவாளர்

 

எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல; தன் மண்ணின் மனிதன் தனது மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாலும், அவருக்குள் வாழ்ந்த கிராமத்து மனிதனை நகர வாழ்க்கையால் மாற்ற முடியவில்லை.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான கதைகள் நகரங்களின் வீடுகளிலும், ஸ்டுடியோக்களின் செயற்கை அரங்குகளிலும் சுற்றிக் கொண்டிருந்தன. அந்தப் போக்கை உடைத்து, புழுதி பறக்கும் கிராமச் சாலைகளையும், வயல்வெளிகளையும், வெயிலில் கருகிய முகங்களையும், வெள்ளந்தியான மனிதர்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அது ஒரு புதிய இயக்குநரின் வருகை மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றிய ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.