பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label ராம்குமார். Show all posts
Showing posts with label ராம்குமார். Show all posts

ராம்குமார் - கொலை முதல் 'தற்கொலை' வரை...


ராம்குமார்  மரணம் தற்கொலையா?கொலையா? என்ற விவாதம்  பரபரப்பாக பேசப்படுகிறது.  அரசியல் தலைவர்கள் உட்பட  எல்லோருமே போலீஸ் ராம்குமாரை கொன்றுவிட்டதாகதான் நம்புகிறார்கள். இதற்கு காரணம் தமிழக காவல் நிலையங்களில் லாகப் மரணங்கள் அடிக்கடி நிகழகூடிய சம்பவமாகும். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்கள் கூட சந்தேக மரணம் அடைந்திருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று திரும்பிய பலர் அவமானத்தாலும்,பயத்தாலும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு.
      இவ்வளவு ஏன் தமிழத்தை பொருத்தவரை காவல்நிலையம் செல்வதையே அவமானமாக கருத்துகிற சுழ்நிலை தான் அதிகம்.  அங்கும் அப்படித்தான் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால் ,அல்லது சமூகத்தில் பெரிய மனிதர்கள்,பணம் உள்ளவர்களை மரியாதையாக நடத்தும் காவல்துறை,சாமானியர்களை அவமானப்படுத்தி ,மிரட்டி அனுப்புகிறது என்பது உண்மை தான்.