பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label பஸ்ஸ்டிரைக். Show all posts
Showing posts with label பஸ்ஸ்டிரைக். Show all posts

பயணிகள் உயிரோடு விளையாடும் அதிமுகவினர்...

அதிகாலை 4 மணிக்கே  (நிம்மதியா தூங்க  முடியல) அனைத்து மாவட்ட கலெக்டர் கள்,வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லோரும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆஜர். போட்டாவுக்கு போஸ் கொடுத்தார்கள். பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்றார்கள். இவர்களுடன் அதிமுக  அமைச்சர்கள், எம். எல். ஏ.க்கள்,மாவட்ட,வட்ட பொருப்பாளர்கள்  பஸ்டாண்டுகள்,பணிமனைகளில் களம் இறங்கினார்கள். 100 சதம் பேரூந்துகள் ஓடும் என்றார்கள். அவர்களும் பஸ்களை பிடித்தபடி,சாய்ந்துபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள்,நடத்துனர்களை கொண்டுகாலை முதல் மதியம் வரை 25 சதம் பஸ்கள் ஓடின. அவர்களும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்பார்கள். மதியத்திற்கு பிறகு பஸ்கள் குறையதொடங்கி விட்டது.

பஸ் நிறுத்தம் சரியானதே...

24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள்,வருபவர்கள்  சந்திக்கிற இடம் மதுரை என்பதால்  24 மணி நேரமும் மாநகர டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
ஆனால் நேற்று மதுரை, மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையிலேயே குவிந்து கிடந்தார்கள்.குழந்தைகள் ,பெண்களுமாக அங்கும்,இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார்கள். சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்த மினிபஸ்கள், தனியார்  பஸ்கள்களில் தொங்கிய படியே பயணம் செய்தார்கள். அஞ்சலக தேர்வு எழுத முடியாமல் பலர்  சிரமப்பட்டார்கள். இன்னும் இது போல பல பிரச்சனைகள்.