காலை எழுந்ததும் ராசிபலன் பார்த்துவிட்டு தான் வேலையை துவங்குபவரா நீங்கள்....,ராசிபலன் படிதான் எல்லாம் நடக்கிறதா? இல்லையா? ராசிபலனை நம்பலாமா? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக வந்திருக்கிறது கதிர் நூல் தொகுப்பில் வந்துள்ள ஒரு கதை.சமூகம் குறித்து அக்கரைப்படுகிற இளைஞர்கள் குறைந்து வரும் காலம் இது. டாஸ்மாக் மயக்கத்தில் பொழுதை கரைக்கும் காலம். சுற்றுச்சூழல், சமூக அக்கறை, விவசாயம், மூடநம்பிக்கை, தமிழ்,தமிழர்கள் குறித்த புதிய தகவல்களுடன் 16 வேறுபட்ட தலைப்புகளில் கதிர் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த தை முதல் தேதியில் தமிழர் திருநாளான்று வெளியிடப்பட்ட தொகுப்பு..
1.இளமைபொங்கல் ...
சாதி,மதம் கடந்த பொங்கல் குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கிறது. தைபாத்திஹா என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் தை பொங்கல் இக்கட்டுரையில் புதிய தகவல் நன்றி ஷாஜகான்...

.jpg)







