நீங்கள் ஒரு மருத்துவர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் உங்களுக்குப் பலவிதமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இருந் திருக்கக்கூடும். வாழ்க்கை இனிமையாக இருந்திருக்கும். நீங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு கஷ்டங் களை அனுபவிக்க உங்களைத் தூண்டி யது எது?
எங்கள் குடும்பமே அரசியல் நடவடிக்கை களில் தீவிரமான ஈடுபாடு உடையதுதான். குறிப்பாக என் தாயார் திருமதி அன்னு ஸ்வாமி நாதன் எனக்கு மிகவும் ஆதர்சமாக விளங்கி னார். அவர் காங்கிரஸ் சேவகி. சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். பிற்காலத்தில் அரசியல் சாசன நிர்ணய சபைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை லோக் சபாவுக்கு, மற்றொரு முறை ராஜ்ய சபா வுக்காக. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அரசியல் சூழ்நிலையிலும் பலவிதமான போராட்டங்களுக்கும் இடையில்தான். மிகச் சிறு வயதிலேயே, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் என் உள் ளத்தில் வேரூன்றியதும், இந்தச் சூழ்நிலை யில் நான் வளர்ந்ததால்கூட இருந்திருக்கலாம்.


.jpg)


.jpg)




.jpg)


