போராட்டம் இன்னும் முடியவில்லை...! கேப்டன் லட்சுமி நேர்காணல்


நீங்கள் ஒரு மருத்துவர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் உங்களுக்குப் பலவிதமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இருந் திருக்கக்கூடும். வாழ்க்கை இனிமையாக இருந்திருக்கும். நீங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு கஷ்டங் களை அனுபவிக்க உங்களைத் தூண்டி யது எது?

எங்கள் குடும்பமே அரசியல் நடவடிக்கை களில் தீவிரமான ஈடுபாடு உடையதுதான். குறிப்பாக என் தாயார் திருமதி அன்னு ஸ்வாமி நாதன் எனக்கு மிகவும் ஆதர்சமாக விளங்கி னார். அவர் காங்கிரஸ் சேவகி. சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். பிற்காலத்தில் அரசியல் சாசன நிர்ணய சபைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை லோக் சபாவுக்கு, மற்றொரு முறை ராஜ்ய சபா வுக்காக. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அரசியல் சூழ்நிலையிலும் பலவிதமான போராட்டங்களுக்கும் இடையில்தான். மிகச் சிறு வயதிலேயே, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் என் உள் ளத்தில் வேரூன்றியதும், இந்தச் சூழ்நிலை யில் நான் வளர்ந்ததால்கூட இருந்திருக்கலாம்.

முஸ்லிம்களாகிய நாம்.....


முஸ்லிம்களுக்கு வீடு தரமாட்டோம், இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாழ்நிலை குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அதற்கு ஆதரவும் , எதிர்ப்புமாக நிறைய விமர்சனங்கள் வந்திருந்தன. இதை கருத்தில் கொண்டும்,மேற்கண்ட இரு பதிவுகளும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்தது போல இந்தியாவில் முஸ்லிம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்பேப்பர் இணைய இதழில் மூதூர்மொகமட்ராபி எழுதிய முஸ்லிம்களாகிய நாம்... என்ற கட்டுரையை இன்றையவானம் வாசகர்களுக்காக....  

ஒலிம்பிக் நகரில் களைகட்டும் திருட்டு தொழில் + படங்கள்


நாளை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக் திருவிழா துவங்க இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து அரசு பலகோடிகளை கொட்டி லண்டன் மாநகரை அழகுபடுத்தி வைத்துள்ளது. நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அவர்களுக்காக தங்கும் விடுதிகளுடன் கூடிய பூங்காக்கள், பொழுதுபோக்கு மையம், பிரண்மாண்டமான ஒலிபிக்கோபுரம் என ஏராளமான புதுமைகளும் செய்யப்பட்டுள்ளன.

ரஜினி, கமல் - நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்குவருகிறது


ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இருவரும் இணைந்து இனி நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர்கள் இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் புத்தம் புதுப் பொலிவுடன் தமிழகம் முழுவதும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.

சீமானுக்கு கல்யாணம்


’கண்டுபுடி கண்டுபுடிடா’  படத்தில் முழுக்க முழுக்க  கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு கதையில், துப்பறியும் காவல் அதிகாரியாக நடித்த சீமான், இன்னும் இரண்டே மாதங்களில் கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருமண நாள் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமானுக்கு வைகோ தலைமையில் கல்யாணம்.

இசைத் தொகுப்பாகும் கமல்ஹாசனின் பாடல்கள்


கமல்ஹாசன் இதுவரை திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாம்.
நடிப்பு உள்ளிட்ட வேலைகளோடு அவ்வப்போது பாடவும் செய்வார் கமல். அந்தரங்கம் படத்திலிருந்துதான் கமல்ஹாசன் பாட ஆரம்பித்தார். 1975ம் ஆண்டு வெளியான படம் அந்தரங்கம். ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்று தொடங்கும் அந்தப் பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றார்.

முஸ்லிம் மக்களின் பரிதாபத்துக்குரிய வாழ்நிலை



இந்திய நாட்டில் கணிசமான மக் கள் தொகை கொண்டவர்களாக முஸ்லிம் கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகை யில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதம். பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலை மிகவும் பரி தாபத்துக்குரியதாகவே உள்ளது. இந் நிலையில் தான் பா.ஜ.க. போன்ற இந் துத்துவ வகுப்புவாத இயக்கங்கள், இந்தி யாவில் சிறுபான்மையினரான முஸ்லிம் களுக்கு தேர்தல் ஆதாயத்துக்காக சலு கைகளை அள்ளிக் கொடுப்பதாகவும், இதனால் பெரும்பான்மை மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாகவும் உண் மைக்கு மாறான கோயபல்ஸ் பிரச்சாரத் தைத் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். எனவே முஸ்லிம்களின் உண்மையான வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களது வாழ்நிலையில் முன்னேற் றத்தை ஏற்படுத்தவும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை கள் தொடர்ந்து வலுப்பட்டு வந்தன.

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்தலாம்?


விளையாட்டு வீரர்களின் - ரசிகர்க ளின்   உலகத்திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி லண்டனில் துவங்குகிறது.இந்த போட்டியின் உலகமுழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் ,ரசிகர்கள், உலக தலைவர்கள் என குவிந்திரு க்கும் இடமாக லண்டன் மாநகரம் இருக்கும். எனவே லண்டனில் போட்டி நடைபெறுகிற பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட காவலர்கள், 13.500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள். இவை போக முப்படைகளின் வீரர்கள்,அதிகாரிகள் போர்விமானம்,எலிகாப்டர்களிலும் அங்காங்கே கண்காணிப்பு,பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக விமானப்படையும் முழுமையாக ஈடுபடுத்தபட்டுள்ளது.

செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!


‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர் மன்மோகன் சிங் புகைப்படத்தைப் போட்டு, படத்துக்கு மேலே இந்த வார்த்தையையும் பிரசுரித்திருக்கிறது அமெரிக்காவின் பிரபலமான ‘டைம்’ பத்திரிகை. அதுவும், அட்டைப்படத்தில். அது சம்பந்தமான விரிவான கட்டுரை உள்ளே இடம் பெற்றிருக்கிறது. விரிவான அந்த பல பக்க கட்டுரையின் ஒற்றை வரி சாராம்சம்தான் ‘அண்டர் அச்சீவர்’ அதாவது; செயலற்றவர்!

‘செயலற்ற பிரதமர்’ என்ற குற்றச்சாட்டு இன்று, நேற்றல்ல... மிக நீண்டகாலமாகவே மன்மோகன் மீது சுமத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விஷயம். அது, ‘டைம்’ சொல்லித் தெரிகிற புதிய தகவல் அல்ல. ஆனால், ‘செயலற்ற பிரதமர்’ என இந்தியாவின் எதிர்க்கட்சிகளும், தலைவர்களும் குற்றம் சொல்கிற தொனிக்கும், ‘டைம்’ குரலுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ‘டைம்’ சொல்லி விட்டது என்பதற்காக, மையமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பது, புத்திசாலித்தனமாக இருக்கமுடியாது. ‘டைம்’ பத்திரிகையின் இந்த திடீர் விமர்சனத்துக்குப் பின்புலமாக, மிகப்பெரிய சர்வதேச அரசியலும் இருக்கிறது.

இந்து தீவிரவாதிகளின் அட்டகாசங்கள்


தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். பத்திரிக்கைகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இந்துதீவிரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை.இந்தியாவில் நடக்கின்ற தீவிரவாதசெயல்களில் பாதி இந்து தீவிரவாதிகளால் நடைபெறுகிறது என்பதே உண்மை. காந்தியடிகளை கொலை செய்த கோட்சே, ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை சேர்ந்த  இந்து தீவிரவாதிதான்.

முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு தர மாட்டோம்


 

இந்தியாவில் ஓரு குறிபிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு வீடுவாடகைக்கு தரமுடியாது என்கின்ற அளவிற்கு மத வெறி அதிகரித்துள்ளது. இது மோசமான நிலையை இந்தியாவில் ஏற்படுத்தும்.

பிலிம்பேர் விருதுகள்: கமல் கையால் ஸ்ருதிக்கு விருது


2011ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட 4 விருதுகளை ஆடுகளம் படம் அள்ளியது.
2011ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது சிறந்த தமிழ் நடிகருக்கான விருது ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு கிடைத்தது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனுஷுக்கு விருது வழங்கினார். எங்கேயும் எப்போதும் படத்திற்காக அஞச்லிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

தமிழ்நாட்டுக்கும்- தமிழக மக்களுக்கும் நன்றி - ''உருமி'' பிருதிவிராஜ்


''மொழி'' படத்தின் மூலம் தமிழில் ஒருரவுண்ட் வலம் வந்தவர் பிருதிவிராஜ். இடையில் சரியான படங்கள் அமையாமல் மலையாளத்திற்கு சென்றார். ''உருமி'' படத்தின் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளார். மேலும் உருமி படத்தின் நடிகராக மட்டுமல்லாமல்  தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் ஆனதின் பின்னணி என்ன? இனி தொடர்ந்து படங்களை தயாரிப்பாரா? இந்த கேள்விகளுக்கு பிருதிவியின் பதில்கள் வேறுமாதரியாக வருகிறது.

உங்கள் மரண தேதி தெரிந்து கொள்ள...


மனிதர்களின் மரண தேதியை சில நொடிகளில் கணித்து சொல்லிவிடும் அதிபயங்கர திகில் வெப்சைட் இன்டர்நெட் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
          பிறப்பின் போதே நிச்சயிக்கப்படுவது மரணம் தான். இந்த மரணத்தை வெல்வதோ, தள்ளிப்போடுவதோ அல்லது மரணநாளை தெரிந்து கொள்வதோ முடியாத ஒன்றாகும். மதம் சார்ந்த நம்பிக்கையில் இறைநியமத்தின் படி  மனிதர்களுக்கு நிச்சயிக்கப்படும் மரண தினத்தை இன்றுவரை யாரும் அறிந்தது கிடையாது. அவரவர்கள் பலாபலன்களுக்கு ஏற்ப இயற்கை அல்லது அகால மரணங்கள் நடை பெற்று வருகின்றன.                    இதனிடையே எவராலும் கணிக்க முடியாத மரணநாளை சிலநொடிகளில் கணித்து கூறிடும் டெத்டேட்(deathdate ) எனும் வெப்சைட் இன்டர்நெட்டில் அதிபயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மண்டை ஓடு படத்துடன் கோரமாக காட்சியளிக்கும் இந்த வெப்சைட்டில் மரணநாளை தெரிந்து கொள்ள ஆவலுடன் நுழைவோருக்கு முதலில் மரண விண்ணப்ப படிவம் கொடுக்கப்படுகிறது.