பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label கடைசிப் பேட்டி. Show all posts
Showing posts with label கடைசிப் பேட்டி. Show all posts

கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி

உங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா?“
எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம்.கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன்.