பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label அமைச்சரவை. Show all posts
Showing posts with label அமைச்சரவை. Show all posts

ஊழல் செய்த நபர் முதல்வராக யார் காரணம்?

ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை கேள்வி எழுப்பியுள்ளார். நியாய மற்ற நபர் நமது பிரதிநிதி யாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் நமது தேர்தல் முறையில் பெரிய குறை பாடு உள்ளது என்பதை யும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நிரூபிக்க வேண்டியது யார்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல் லாது என்று கூறி அதிமுக வினர் வாதம் செய்து வரு கின்றனர். மக்கள் சேவை யாற்றக் கூடியவர்கள் திடீ ரென சொத்துக்குவித்தால், முறையான ஊதியத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்க முடியுமா என்ற அளவுகோல்கள் உள்ளன. வங்கிக்கடன் மூலம் சொத் துக்கள் வாங்க ஆதாரங் களைக் காட்ட வேண்டும்.

மாமன் மகள் படக்கதையான மோடியின் அமைச்சரவை..

நடிகர் சத்யராஜ் நடித்த மாமன்மகள் படத்தில்...சத்யராஜுக்கு மாமாவாக வரும் கவுண்டமணி கேட்பார் .. மாப்ள ஓரு கையில எத்தன பேர அடிப்பே... 20..30 என்பார் சத்யராஜ், கவுண்ட மணி :இரண்டுகையில ... சத்யராஜ் 100 ,150 என்பார்.கவுண்டமணி அப்போது சொல்வார் மாப்ள நீ அரசிவாதியாக முழுதகுதி இருக்கு என்பார்.
         இப்படித்தான் இருக்கிறது இந்திய அரசியல் ... அதிலும் குறிப்பாக தற்போதைய மோடி அரசு..

கிரமினல்கள்  நிறைந்த அமைச்சரவை..

அரசியல்  என்பது கிரிமினல்களின் கூடாரமாகிவிடும் என முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் நரேந்திர நாத் வோரா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆள்பலம், பணபலம் மட்டுமின்றி, நில பேரங்கள், சாராய வியாபாரம், தாதுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும் மாஃபியா கும்பல்களாலும் நமது தேர்தல் நடைமுறைகள் செயல் படுத்தப்படுகின்றன. “பாஜகவின் வேட்பாளரோ அல்லது தே.ஜ.கூட்டணியின் வேட்பாளரோ, யாராக இருந்தாலும் சரி... எவரையும் நான் விடப்போவதில்லை...