மூட்டை மூட்டையாய் கட்டிப் பதுக்கி வைச்சிருக்கிறவனுக்கெல்லாம் இப்படித்தான்யா பாடம் புகட்டணும் என்று சிலஅறிவுஜீவிகளும், ‘தேசபக்திக்காரர்களும்’ சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கும், கறுப்புப் பண முதலைகளுக்கும், பெரும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவு யாரும் மறுக்கமுடியாத உறவாகும்.
சொந்த அரசியலைத்தாண்டிய இந்தப் பொருளாதார உறவுகள் நமது மக்களுக்குதெரியாத இரகசியங்களுமல்ல. அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உடனே அறிவிக்கப்பட்ட செயல் அல்ல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள்செல்லாத அறிவிப்பு. கடந்த ஆறு மாதமாய் திட்டமிடப்பட்டது என இப்போது, தகவல் கசிகிறது எனில் என்ன அர்த்தம்? பெருமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ளபணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே அர்த்தம்.ஏனெனில், கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ள அந்நிய மூலதனம் என்ற பெயரில் ஆயிரத்தெட்டு வழிமுறைகளை அரசே சட்டப்படி செய்துதருகிறது எனும்போது, அதனை செய்துகொள்வதுதானே சுலபமானது.
சொந்த அரசியலைத்தாண்டிய இந்தப் பொருளாதார உறவுகள் நமது மக்களுக்குதெரியாத இரகசியங்களுமல்ல. அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உடனே அறிவிக்கப்பட்ட செயல் அல்ல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள்செல்லாத அறிவிப்பு. கடந்த ஆறு மாதமாய் திட்டமிடப்பட்டது என இப்போது, தகவல் கசிகிறது எனில் என்ன அர்த்தம்? பெருமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ளபணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே அர்த்தம்.ஏனெனில், கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ள அந்நிய மூலதனம் என்ற பெயரில் ஆயிரத்தெட்டு வழிமுறைகளை அரசே சட்டப்படி செய்துதருகிறது எனும்போது, அதனை செய்துகொள்வதுதானே சுலபமானது.
