Showing posts with label கார்த்திக்சுப்புராஜ். Show all posts
Showing posts with label கார்த்திக்சுப்புராஜ். Show all posts

இறைவி - படமாய்யா இது ???

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே ஓருவித பழுப்பு நிற ஒளிப்பதிவு. யதார்த்த நடிப்பு என்ற பெயரில் மெதுவாக
நகரும் காட்சிகள். அதிலும் விஜய் சேதுபதி, பாபி சின்காவும்  நடிப்பு என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள்.
         இவங்க ரெண்டுபேரும் பத்தலைன்னு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு ரெம்ப மோசம். எதற்கெடுத்தாலும் கத்துகத்துன்னு கத்துறார். சினிமா என்பது பொழுதுபோக்க மட்டும் தான். அதுல கொஞ்சமா  கருத்து சொல்லலாம்.அதுவும் புரியறமாதரி சொல்லனும். அவார்ட் கிடைக்கனும் மட்டும் குறிகோள்  வச்சுகிட்டு படம் எடுத்திருகிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் ரெம்ப நீளம். சுத்த போர் அடிக்கிற படம்.
        சுருக்கமாக கதை...
 காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளரு டன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.
 இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.