20 தமிழர்கள் படுகொலையில் உண்மையில் நடந்தது என்ன?

தமிழர்களுக்கு கடல்,கட்டை இப்படி எதுவானலும் கண்டம் தான் போல. மீன்பிடிக்க போகும் மீனவர்களை இலங்கை படை சுடுகிறது.கேரளாவும், கர்நாடகாவும் நியாயமாக தரவேண்டிய தண்ணீரை தரமறுக்கிறது. இப்போது ஆந்திராவும் கூலி தொழிலாளர்களை போலி என்கவுண்டர் மூலம் காக்காய்,குருவி போல சுட்டுத்தள்ளி யிருக்கிறா்கள்.
ஆனால் ஒரு ஆறுதல் இந்த படுகொலையை ஆந்திர எதிர்கட்சிகள் கண்டித்திருக்கின்றன. கேரளா,கர்நாடகாவில் இதை எதிர்பாக்க முடியாது...
போலி என்கவுன்டர் நடந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை முகநூலில் அப்பணசாமி என்பவரின் வர்ணனை .

`கட்டையெல்லாம் லைனா வரிசையா கேப் விட்டு, கேப் விட்டுப்போடுங்கடா..

.``அங்கபாரு ஒரு கட்டை கோணலாக் கிடக்கு பாரு..
டேய் அத பன்னுடாங்...
``கேப் கரக்டா இருக்கா...“இப்ப... கட்டை கேப்ல ஒவ்வொரு பாடியா போடணும் “பாத்தா நேச்சுரலா தெரியணும்...

 பாடிய கோணல் மாணலா போடணும்... “முகத்தத் திருப்புடா... முகம் தெரியணும்ல... கை, காலெல்லாம் அகலமா விரிச்சுக் கிடக்கணும்... அப்பதா நேச்சரா இருக்கும்... சப்பல் ஆங்காங்க சிதறிக்கிடக்கணும்.
                         “ஓகேயா... பாடியெல்லாம் கவுண்ட் பண்ணியாச்சா...“இப்ப பிறஸூக்கு சொல்லீருங்கப்பா...“ஷ்... அப்பாட...மேலே உள்ளவை முகநூலில் அப்பணசாமியின் வர்ணனை . மிகைபோல் தோன்றினும் மிகையல்லவே!
தமிழகத்தில் இதுபோல் எவ்வளவு பார்த்திருக்கோம்.

 இதன் பின்னால் எழும் வேறு கேள்விகளையும் பார்ப்போம்; உண்மை விளங்கலாம்.

  1.  பத்து நாட்களுக்கு முன்பே `கண்டதும் சுட உத்தரவு’ உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது உண்மையா? இந்தச் செய்தி தமிழக அரசுக்கும் தெரியுமாமே ! மெய்யா?
  2.  கடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது உண்மையா? மேலும் அந்தக் கிராமமக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் மெய்யா? பொய்யா ?
  3. செம்மரக் கடத்தலில் ஈடுபடும் இரு பெரும் புள்ளிகளுக்கு இடையில் உள்ள வியாபாரப் பகையால் வெடித்த சம்பவம் இது என்பது உண்மையா ? 
  4.  முன்னாள் ஆளும் கட்சிப் பிரமுகரும் இப்போது சிறையிலிருந்தாலும் அங்கிருந்தபடியே கடத்தல் குழுவை இயக்கும் கெங்கிரெட்டி என்பவரின் கடத்தல் குழுவினரோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறவர்களே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது சரியா? இந்தக்குழு கடப்பாவழி செயல்படுகிறது என்பது சரியா?
  5.  இப்போது ஆளுங்கட்சியைச் சார்ந்தவரும் - ஆந்திர முதல்வரின் பூர்வீக மான சந்திரகிரியை வழியாகக் கொண்டு செயல்படும் ஒரு நாயுடுகாரின் கையை வலுப்படுத்த - காவல்துறையும் இவர்களும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வெறியாட்டம் இது என்கிற தகவலில் உண்மை உண்டா? இல்லையா?
  6.  கடத்தப்பட்ட செம்மரங்கள் தமிழக துறைமுகம் வழியாகவே வெளிநாடு செல்கிறது என்பது ஊரறிந்த ரகசியமல்லவா? தமிழக காவல்துறைக்கு இதெல்லாம் தெரியாதா?
  7.  கொல்லப்பட்டது கூலிக்கு வேலைசெய்யும் பழங்குடிகளல்லவா? வயிற்றுப் பாட்டுக்காக இத்தொழிலில் நிர்பந்திக்கப்பட்டவர்களல்லவா இவர்கள் ? இவர்களுக்கு வாழ்வுரிமையை, வாய்ப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசும் குற்றவாளி அல்லவா?
  8. இந்த பெருங்கொள்ளையில் பெரும்பங்கைச் சாப்பிடும் பெரியமனிதர்களை அவர்கள் வசதியாக வாழும் பண்ணைவீடுகளில் சென்று சுட்டுக்கொல்ல வேண்டாம். கைது செய்யவாவது அரசுகளுக்கு தைரியம் உண்டா?
  9. åவேளச்சேரியில் வடநாட்டவர் என்று சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் இல்லையா ? தமிழகத்தில் இதுபோல் மனித உரிமை மீறப்படும்போது அதனைசட்டம் ஒழுங்கைப் பேணும் துணிச்சலான நடவடிக்கை என நெஞ்சிலே ஈரமற்றுப் பாராட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் ?- 

தகவல் தீக்கதீர் 
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

பணம் - அனைத்திற்கும் காரணம்...
Yarlpavanan said…
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்பு நண்பரே!
அன்பு சகோதரி
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு