கற்பழிப்பு சம்பவங்களும் சொரணைகெட்ட தமிழனும்


650 கற்பழிப்புகள் இந்திய தலைநகரான டில்லியில் 2012ம் ஆண்டு மட்டும்.2011ல் 522, கடந்த 1953 - -2011க்கும்இடையில் 873 சதம் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. நண்பர்களே இது வழக்கு பதிவு மட்டும் தான் வெளிவரதவை எத்தனையோ?.டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்புக்கு பிறகு அவர் மரணமடையும் வரை டெல்லியில் நடைபெற்ற ஆவேச ஆர்ப்பாட்டங்கள் இது வரை காணாத ஒரு நிகழ்வு. தன்னெழுச்சியான போராட்டம் என்பது இந்தியாவுக்கு புதிது. பிரதமர் வீடு,சோனியாவீடு, ஜனாதிபதி மாளிகை என முற்றுகை, போராட்டத்தை தடுக்க ரயில்,பேருந்துகள் நிறுத்தப்பட்டன.முக்கிய இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு இதையும் மீறி ஆவேசப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
                    ஆனால் இதே நேரத்தில் தமிழகத்திலும் டெல்லி சம்பவத்தை போலவே மிக கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக...

             விருத்தாச்சலம் அருகே சுகந்தி என்ற பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் நாசம் செய்திருக்கிறது. அந்த பெண்ணின் உறவினர் கண்முன்னால் கத்தி முனையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.சுகந்தியும் மருத்துமனையில் இருக்கிறார்.

           தூத்துக்குடி அருகே 7ம் வகுப்பு மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

            நாகப்பட்டினம் , தலைஞாயிறு அருகே 4ம் வகுப்பு மாணவி(குழந்தை) பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

                   மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் சாம்பிள்தான்... இது தொடர்கதையாகிவருகிறது கற்பழிப்பு சம்பவங்கள்.டெல்லி சம்பவங்களுக்கு நடைபெற்ற போராட்டத்தை போல தமிழகத்தில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறவில்லை. செய்திதாள்களில் படித்து ''அப்படியா'' என்றதோடு தமிழன் நின்று கொண்டான். ஊடகங்களும் கற்பழிப்பு சம்பவங்ளை பக்கம்பக்கமாக படங்களை வெளியிட்டு பணம் சம்பதித்தன. அரசியல் தலைவர்களும் கண்டனங்களோடு நிறுத்தி கொண்டார்கள். தமிழா உனக்கு சொரணையே இ¢ல்லையா?


             இந்த சம்பவம் என்று இல்லை இலங்கை தமிழர் பிரச்சனையா வைகோ, சீமான் மட்டும்தான் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          விலைவாசி உயர்வா? கம்யூனிஸ்டகள் போராடுவார்கள் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          முல்லை பெரியாறு பிரச்சனையா? கம்பம்,தேனி பகுதியே சேர்ந்தவர்கள் போராடுவார்கள் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          கூடங்குளம் பிரச்சனையா உதயகுமார் போராடுவார் மற்றவர்கள் வேடி.......
          முன்பெல்லாம் பஸ்கட்டம் 50 பைசா உயர்நதாலே மாணவர்கள் போராட்டம் ஒருவாரம் நடக்கும் இப்போது அவர்களும் டாலர் கனவுகளில் மிதக்கிறார்கள்
 அக மொத்தம் ஓட்டுக்கு... நோட்டுகளை வாங்கிக்கொண்டு மழுமட்டையாக... சொராணை கெட்டு போய் விட்டான் தமிழன் .
-செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

VOICE OF INDIAN said…
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

-இந்தியன் குரல்
நண்பரே தமிழகத்தின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுடன் சேர்ந்து போராடாவிட்டாலும் பரவாயில்லை... ஆனால் போராடடுபவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலையும் போது... யார்தான் களத்தில் இறங்கி போராடுவார்கள்...?
ramalingam said…
ஆமாம். இண்டியா பாகிஸ்தான் மேட்ச்தான் எங்களுக்கு முக்கியம்.