சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதா தாஜ்மஹால்?


முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.        தாஜ்மஹால்  குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார்,
ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
           
ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள்,மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத்  ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.
 தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ''மஹால்'' என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ''மும்தாஜ்உல்ஜமானி'' ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து  மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக்  கேள்வியை எழுப்பியுள்ளார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை  கணித்தவர். மில்லரின்  கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக்  ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

              அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.

தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.
                           இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ''தாஜ்மஹால் உண்மையான வரலாறு'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள்  நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.

                                     
இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது  அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.தாஜ்மஹாலை நேரில் பார்த்திருக்கிறீர்களா?... பாருங்கள்  உங்களுக்கு  எந்த வயதுதாக  இருந்தாலும் காதல் பற்றிக்கொள்ளும்

 -ஜே.எஸ்.செல்வராஜ்
படவிளக்கம்
படம் 1 பேராசிரியர் பி.என்.ஓக்
படம் 2 பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.

நான் இந்து மதவெறியனோ, இந்து தீவிரவாதியோ அல்ல...
எனக்கு கிடைத்த தகவலை உங்கள் முன் விவாததிற்கு வைத்துள்ளேன்.
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்... நன்றி.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

மறுபடியும் சர்ச்சை ஆரம்பம் ஆச்சா...?

நல்லது... உலகம் உருப்படும்...
UNMAIKAL said…
மீட்போம்! மீட்போம்! மீட்போம்!

சிவபெருமானின் உறைவிடமான‌ பூலோக சொர்க்கமான திருக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????


தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.

Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

or that the Catholic Vatican,

Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew.
He wrote books in three languages.

சொடுக்கி.
>>
மெக்காவையும் , மதீனாவையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.
<< காணுங்கள்.

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;

`கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).

சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.

ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.


ஏழாம் நூற்றாண்டிலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -

சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?
<<< படியுங்கள்

.
UNMAIKAL said…
தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.


உலகனைத்தும் உள்ள அனைத்துமத வழிபாடு தலங்களும் அனைத்துமத புனித தளங்களும் இந்துமத கோயில்களின் மேல் உருவாக்கப்பட்டவைகள் என்ற இந்துத்வா காவிக‌ளின் ஓல‌த்தை கேட்டு கேட்டு ப‌டித்து ப‌டித்து புளித்துவிட்டது.

வரலாற்றை திரித்து திரித்து
பொய்களை திரும்ப திரும்ப கூறி திரும்ப திரும்ப எய்தி எய்தி ஜகதாள புரட்டு செய்வதில் வல்லவர்கள் இந்த‌ இந்துத்வா காவி புழுதிகள் என்று உலக‌றியும்.
===============================================
Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

or that the Catholic Vatican,

Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew.
He wrote books in three languages.

===========================


இத‌ற்கு ஆய்வு ஒன்றும் தேவையில்லை.


சீனா கைபற்றிக்கொண்ட சிவன், சிவனின் உறைவிடத்தை ,கைலாஸ பர்வதத்தை, (கைலாஸ் மானஸரோவர்) திருக்கைலாய‌த்தை நோக்கி இந்துத்வாக்க‌ள் எப்பொழுது ர(த்)தயாத்திரை ந‌ட‌த்த‌ப்போகிறார்க‌ள்.?

முதலில் 1950 வாக்கில் சீனா ஆக்கிரமித்து கொண்ட‌
தலையாய கடவுளான‌ சிவன்
சிவபெருமான் உறையும் திருக்கைலாயத்தை சீனாவிடமிருந்து இந்துத்வா காவிகள் மீட்கட்டும்.


mubarak kuwait said…
எனக்கு தெரிந்து எந்த கோயிலும் தாஜ்மஹால் கட்டட கலை போன்று இல்லை, இதை சிவன் கிலாக்கினாலும் எந்த முஸ்லிம்களுக்கும் கவலை இல்லை, இது பள்ளிவாசல் அல்ல. இதை கோயிலாக மாற்றுவதற்கு அரசு ஒரு போதும் அனுமதிக்காது காரணம் இதனால் சுற்றுலாத்துறைக்கு நல்ல வருமானம், அதை இழக்க அரசு ஒரு போதும் விரும்பாது. இதை சிவன் கோயில் ஆக்கினால் ஒருவரும் சுற்றி பார்க்க வர மாட்டார்கள்
ஆத்மா said…
என்னதான் நடக்குதோ தெரியவில்லை
பொருத்திருந்து பார்ப்போம் முடிவாக என்ன சொகிறார்கள் என்பதை
kannan tr said…
arrayechikku utpatathu, mannar kalathil ithalam sagajam thodarnthu eluthunga nandri
kk said…
இதற்கு ரொம்ப ஆராய்ச்சி தேவையில்லை..இந்து கட்டிடக்கலை என்றால் கோபுரம் எங்கே? தேர் எங்கே நந்தி எங்கே?..அத்துடன் யாரோ 2 பேர் மட்டும் வரலாற்றை எழுதினார்கள் என்றால் மூடி மறைக்க வழி உள்ளது.பட்டுப்பாதைகள் வழியாக பலர் வந்து சென்ற தேசமிது பல அன் நியதேச ஆக்கிரமிப்புக்களை சந்தித்த தேசம்..எனவே அவர்களுடைய வரலாற்றிலாவது ஒரு வார்த்தை வந்திருக்குமேய்யா? ஏதோ மென் இன் பிளாக் படத்தில் வருகிற மாதிரி எல்லாரையும் நிக்க வைச்சு பிளாஸ் அடிச்சு மறக்கவஅச்சது மாதிரி அல்லவா கதைக்கிறீர்கள்...

ஏய் செல்லாது செல்லாது
arul said…
ippo ithu thevaillai..
arul said…
ippo ithu thevaillai..