தமிழர் தோன்றியது எங்கே?

   


அமேசானில் வெளிவந்துள்ள ஆற்புதமான நூல்.தமிழர் தோன்றியது எங்கே? என்ற இந்த நூல் தமிழர்களின் தமிழரின் பரிணாம வளர்ச்சி…4 நிலைகளில் விளக்குகிறது.

தமிழர்களுக்கு தங்களின் வரலாற்றின் மீது எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு.தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது.சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் கூலித்தொழிலாளர்களாக தமிழர்கள்  குடியேற்றப்பட்டார்கள்.  அதே போலவே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள்  பரவலாக  பல்வேறு காரணங்களுக்காக குடியேற்றப்பட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு "திரைக்கடல் ஒடியும் திரவியம் தேடு"என்தற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெற்று  அமெரிக்கா,ஐரோப்பா, சீனா உள்ளிட்ட   நாடுகளில் வாழ்கிறார்கள் . 1983-இல் ஏற்பட்டஇலங்கை இனக்கலவரங்கள் தமிழர்களை    அஸ்த்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே என உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது.இன்று  அவர்கள் வாழும் நாடுகளிலேயே தனி முத்திரைபதித்து வருகிறார்கள் தமிழர்கள்.

          செஸ்விளையாட்டாகட்டும், இமெயில் கண்டுபிடிப்பாகட்டும், இசைக்காக இரண்டு கைகளிலும் ஆஸ்கார் வாங்குவதாகட்டும் ,இலக்கியம், இயல்,இசை,நாடகம் என இந்த பூமியில் நடைபெறும்  அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் இனம் தனது முத்திரை பதித்து வருகிறது.

      தமிழின் முதல் காப்பியம்(நாவல்) ஏன் உலக அளவிலேயே முதல்காப்பியமான சிலப்பதிகாரம் எழுதப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கலெவெட்டுக்களின் அடிப்படையில் அதிகபட்டமாக 5000 ஆண்டுகள் பழமையான தமிழ்பிராமி,வட்டெழுத்து போன்ற தமிழ் எழுத்துக்கள் கிடைக்கின்றன.  



  மேற்கண்ட நூலை வாங்க.. கீழே உள்ள  இணைப்பை கிளிக் செய்க

                           தமிழர் தோன்றியது எங்கே?

 இந்நிலையில் தமிழர் தோன்றியது எங்கே?  என்ற கேள்விக்கான விடைதேட  உலக தமிழர்களில் நானும் ஒருவானாக  நான்படித்து சேகரித்த பலவேறு தகவல்களின் தொகுப்பே இந்த நூல்.தமிழர்களின் தோற்றம் குறித்து 4 விதமான கருத்துக்கள் உண்டு.ஆதி தமிழன்,ஆப்பிரிக்கா தமிழன்,லெமுரியா  தமிழன்,சிந்துவெளி தமிழன்  இந்த 4 விதமான கருத்துக்களும் வேவ்வேறு காலகட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிகள்   குறித்து 13 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

                               படித்து பாருங்கள் தமிழர்களின் வரலாற்றை புரிந்து கொள்ள முடியும்

Comments