வலைப்பதிவர் சந்திப்பு ... ஆக்கபூர்வமான விழா

வருடத்தில் 280 நாட்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும்.வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள்,இலக்கிய திருவிழா,கலைஇரவுகள், விருச்சத்திருவிழா என ஏதேனும் ஒரு திருவிழா  மதுரையில் தினசரி இருக்கும்.இந்தாண்டு கூடுதலாக வலைப்பதிவர் திருவிழா இணைந்திருக்கிறது.
மதுரை திருவிழா ஏற்பாட்டாளர்களான தமிழ்வாசி பிரகாஷ், சீனாஅய்யா, திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை கடந்த ஓரு மாதகாலமாக செய்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகை விட வலைபதிவர் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகளை செய்து வருகிறார்கள்.
தமிழ்வாசி பிரகாஷ் பல முறை தொலைபேசியில் பேசிய போது வலைப்பதிவர் திருவிழாவை எப்படியெல்லாம் சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்து ஆர்வத்தோடு பேசுகிறார்.
அவர் திருவிழா குறித்து மிகப்பெரிய கனவோடு இருக்கிறார்.
          நாளிதழில் வெளியீடுவதற்காக அவரிடம் பேட்டி கண்டேன். வலைபதிவு,பதிவர்கள், வலைப்பதிவு நிகழ்ச்சிகள், எதிர்காலத்திட்டம் குறித்தும் தமிழ்வாசிபிரகாஷ்,தனபாலன்,சீனாஅய்யா ஆகியோர் அளித்துள்ள பதில்கள் குறிப்பிடத்தக்கது.இலக்கிய அமைப்புகளுக்கு இணையான விழா நிகழ்ச்சி நிரல் அமைத்திருக்கிறார்கள்.புத்தக வெளியீடு,குறும்படம் வெளியீடு என அனைத்தும் ஆக்கபூர்வமான பணிகள்.வெளிநாட்டு பதிவர்கள்,கேரளா,கர்னாடகா,ஆந்திரா போன்ற வெளிமாநில பதிவர்கள் என மதுரை பதிவர் திருவிழா களைகட்ட போவது உறுதி.


         ஏற்கனவே சொன்னது போல பிரகாஷ் பேசிய போது...மதுரையில் உள்ள சில மூத்த பதிவர்கள் பதிவர் சந்திப்பு விழாவுக்கு முரண்பாடாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அவரது வருத்ததை போக்கு வகையில் விழா ஏற்பாட்டாளர்களின்  உழைப்புக்கு நிச்சயமாக மதுரை பதிவர் திருவிழா ... ஒரு மைல்கல்லாக அமையும்..


வாழத்துக்களுடன்
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

எவ்வித முரண்பாட்டையும் முறியடிக்கும் சந்தோச சந்திப்பு திருவிழா...!