மான் கராத்தே... கொஞ்சம் புதுசு


4 மாதங்களுக்கு பிறகு நடக்க போவது தெரிந்து விட்டால் என்னாகும் என்பதுதான் மானகராத்தே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.வழக்கமான காதல்,வில்லன் மோதல் கதையை காமடி கலந்து கொஞ்சம் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். நடிப்பே தெரியாத சிவகார்த்திகேயன் எப்படி சினிமா ஸ்டார் ஆனாரே... அதேபோல பாக்ஸிங் தெரியாத ஒருத்தர் பாக்ஸிங் ஸ்டார் . கதையை சுருக்கமாக....


  ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சித்தர் ஒருவரை சந்திக்கிறார்கள். அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள். அப்போது சதீஷ், செய்தித்தாள் வராத நாளான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாளை கேட்கிறார். அதற்கு சித்தர் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்.
                       
                        ஒன்லைன் ஸ்டோரி என்றால் என்ன?
                      
அதில் இவர்கள் வேலை செய்யும் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது. இது பொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்கிறார்கள். ஊழல் பிரச்சினையில் கம்பெனி மூடப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை பெறுகிறார்கள்.

அதன்பிறகு செய்திதாளில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று தேடுகிறார்கள். அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வெற்றிப் பெற்று ரூபாய் 2 கோடி பரிசை பெறுகிறார் என்ற செய்தி இருக்கிறது. இவர் மூலம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்.

குத்துச்சண்டை என்றால் என்னவென்று தெரியாத ராயபுரத்தில் பீட்டராக இருக்கும் சிவகார்த்திகேயனை தேடி பிடிக்கிறார்கள். அவரை குத்துச் சண்டையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். சிறிது விருப்பம் காட்டாத சிவகார்த்திகேயனிடம் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் வெல்லும் பரிசுத் தொகையை எங்களுக்கு தர வேண்டும் என்று கூறுகிறார்கள்.



இதற்கிடையில் ஹன்சிகாவை பார்க்கும் சிவகார்த்திகேயன், அவரை பார்த்த உடனே காதல் வயப்படுகிறார். ஹன்சிகாவை காதலிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார். ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் அதிகம் என்று தெரிந்துகொள்கிறார் சிவகார்த்திக்கேயன். சதீஷும் அவரது நண்பர்களும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குத்துச்சண்டையில் கலந்துகொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி, குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து குத்துச்சண்டையில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் சதீஷ் மற்றும் நண்பர்கள் உண்மையான குத்துச்சண்டை வீரரான பீட்டர் ஒருவர் இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். இதனால் குழப்பம் அடையும் அவர்கள் உண்மையான பீட்டரை வைத்து போட்டியில் வென்றார்களா? அல்லது குத்துச்சண்டை தெரியாத சிவகார்த்திகேயனை வைத்து வென்றார்களா? என்பதே மீதிக்கதை.
வருத்தபாடத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து நாயகனாக வலம்  சிவ...ன்  இதில் மார்டன் உடையில் கலக்குறார்.பாடல்,ஒளிப்பதிவு என பார்க்கலாம்.டைம் பாஸ்.வெயில்ல அலையாம தியோடர்ல உட்காரலாம்.

 -செல்வன்





உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

இன்றைக்கு பார்த்திடுவோம்...!