பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

சொத்துக்குவிப்பு வழக்கும் முதல்வர்களும்...


18 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு (முன்னாள்)முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்துள்ளது.இது ஜெயலலிதா சந்திக்கும் 2 வது பெரிய வழக்கு எற்கனவே டான்சி ஊழல் வழக்கை சந்தித்து சிறை சென்றவர்.அப்போது தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தை அதிமுக தொண்டர்கள் எரித்து 3 மாணவிகள் பலியானார்கள்.அதற்காக அவர்களுக்கு தூக்குதண்டனை தீர்ப்பும் கிடைத்தது.டான்சி வழக்கில் சிறை சென்ற போது 6 மாதகாலம் ஓ.பன்னீர்ச்செல்வம் முதல்வராக இருந்தார்.

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?

கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது.அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன.அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலக முழுவதும் ஏற்படுத்தியது.அந்த வீடியோ யூடியுப் தளத்தில் பதிவேற்றபட்டது ... சில நாட்களிலேயே உலக முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசபட்டார்கள்,சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில் அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
      இதே போன்று சில தினங்களுக்கு முன்னாள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர வானில் மேகங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பொருளைப் பல மக்கள் புகைப்படம் எடுத்து தமது டுவிட்டர் மற்றும் ஏனைய சமூகத் தளங்களில்

செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்

நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை குறைக்கும் வேலைகள் நடந்து கொண்டருக்கின் றன.மங்கள் யாண் விண்கலம், தனது நீண்ட பயணத்தின் நிறைவாக, செவ்வாய் கிரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது. இந்த விண் கலம், புதனன்று (24)செவ்வாயின் நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற் காக திங்களன்று நடந்த‘டெஸ்ட் பயர்’ வெற்றிகர மாக முடிந்துள்ளது.

மதுரை பாறைத்திருவிழாவுக்கு வர்றீங்களா?...

வருடம் 365 நாட்களில் 280 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயில்லில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். இலக்கிய சந்திப்புகள்,பட்டிமன்ற ங்கள்,சொற்பொழிவுகள் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் இடம் மதுரை.ஏற்கனவே அக்டோபர் 26 வலைப்பதிவர் திருவிழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே தமிழர்களின் பண்பாட்டை,கலாச் சாரத்தை,மொழியை முன் வைத்து பசுமைநடை அமைப்பு 40வது பயணத்தை பாறைத்திருவிழாவாக கொண்டாடுகிறது.
             2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை தமிழர்களின் பண்பாட்டுத்தலைநகரமாக விளங்கி வருகிறது.மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக குகை ஓவியங்கள், தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள்,சங்க இலக்கியங்கள்,நாட்டுப்புற பாடல்கள்,வடமொழி மற்றும் பிறநாட்டு  அறிஞர்களின் குறிப்புகள் திகழ்கின்றன.

செவ்வாயை அடையும் முதல் ஆசிய நாடு இந்தியா


செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைகோள் இந்தியாவுக்கு பெற்றுத்தரும் வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) அறிவியல் செயலாளர் வி.கோட்டீஸ்வர ராவ் தெரிவித்தார்.

கமலின் பாபநாசம் புகைப்படங்கள்....

கமல் ரசிகர்களுக்கு தொடர்ந்து சந்தோசத்தை கொடுக்கும் விதமாக மூன்று படங்கள் காத்திருக்கின்றன. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்,தற்போது அதிரடியாக பாபநாசம் படம் வேகமாக தயாராகிவருகிறது.
         விஸ்வரூபம் 2 அதன் முதல்பாகத்தை போலவே  ஜேம்ஸ்பாண்டி டைப் கதை... ஓரேமாதரியாக அடுத்ததடுத்து வேண்டுமே என்பதால் உத்தமவில்லன். 16ம் நூற்றாண்டு நடன கலைஞனாகவும் தற்போதைய காலத்து இயக்குனராகவும் இரண்டு வேடம். கேரள நடனக்கலைஞரின் வேடம் அணிந்த போது கமல் காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனங்கள் வந்தன. இதில் காப்பியடிக்க என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.

மோடியின் 100 நாட்கள்...

திரைப்படங்களுக்குதான் 10வதுநாள், 25 வது நாள்,50வதுநாள்....100நாள் என் போஸ்டர் அடிப்பார்கள். இப்போது
அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியின் 100 வது நாளை விழாவாக கொண்டாடுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க. தனது 100 வது நாளை மிக கோலாகலமாக கொண்டாடியது. நாளிதழ்களில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தில் விளம்பரங்கள். புதிய திட்டங்கள்அறிவிப்பு. அந்த கட்சி தொண்டர்கள் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாடி முடித்துவிட்டார்கள். இப்போது மோடிக்கு 100வது நாள்...

எட்டு மாதங்களில் 45 கொலைகள்


திண்டுக்கல் என்றால், பூட்டு, பிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.