பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

கொரோனா கவிதை




கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தன் ஆட்டைத்தை அதிகரித்தபடி செல்கிறது.பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் மரம்,பறவைகள்,செடிகள் நம்மைபார்த்து நீங்கள் அவ்வளவு தானா என கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அதுதான் கவிதை.
--------------------------------------------------------------
மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா
விமானம் ,ராக்கெட்
கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவுதானா?
என பறவை கேட்டது...
உலகை பல முறை அழிக்கும்
அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவு தானா ?
என மரம் கேட்டது...
எங்களை மரபணு மாற்றம்
செய்தீர்களே நீங்கள்
அவ்வளவு தானா ?
என காய்கறிகள் கேட்டது...
நான் உயர்ந்தசாதிக்காரன்,
நான் பெரிய பணக்காரன்
என பீற்றிக்கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என காற்று கேட்டது...
உலகை அளப்பிறந்தவர்கள்
நாங்கள் அழிவற்றவர்கள்
என தலைகனம் கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என டைனோசர் கேட்டது....
இந்த பிரபஞ்சத்தில் எங்கும்
இல்லாத பரிணாமம்
நாங்கள் என்றீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என பூமி கேட்டது...
இந்த பூமிக்கு
நீங்கள் வந்து செல்லும்
விருந்தினர்கள் மட்டும்
நீங்கள் அவ்வளவுதான்
என்றது இயற்கை
 அ.தமிழ்ச்செல்வன்
திருமங்கலம் -மதுரை

யாரோ ஒருவன்...

ஒட்டிப்போன தன்
வயிறு மடியும் அளவுக்கு
குனிந்து ,நிமிர்ந்து
மிக உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தான்...
அவன் உதடுகள் எதோ
ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தன...
யாரும்புரிந்து கொள்ள முடியாத
மொழியில்  அது...
உற்சாக நடத்திற்கிடையே
தன் கண்களை
விரல்களால் அழுத்தியபடியே
சில நொடிகள் நிறுத்தினான்...
மீண்டும் நடனம் தொடந்தது...
அவனை இதற்கு முன்
பார்த்ததில்லை
பேருந்து நிறுத்தத்தின்
தேனீர் கடை திட்டில் அமர்ந்திருந்தான்
சிலர் சிரித்தார்கள்,
சிலர் பரிதாபப்பட்டார்கள்
அவனின் அடுத்த சைகை எதிர்பார்ததார்கள் சிலர்...
யார் அவன்..
தன்னையே
 தொலைத்துவிட்டவன்
யாரோ ஒருவன்.

- அ.தமிழ்ச்செல்வன்





கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி

உங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா?“
எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம்.கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன்.

பணத்தை எங்கே தேடுவேன்?


எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? 
பணத்தை எங்கே தேடுவேன்?

 மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

அன்றாடம் காட்சிகளை அலையவிடும் பணத்தை எங்கே தேடுவேன்?

அம்பானி அடுப்பறையில் புகைந்து விட்டாயோ?

அதானி கழிவறையில் கசங்கி விட்டாயோ?


பாஜக ஆபிசில் பதுங்கிவிட்டாயோ?

ஆர்எஸ்எஸ் ஆபிசில் அமுங்கி விட்டாயோ?

வரிசையில் நின்று மயங்கி விட்டாயோ?

வாழவழியின்றி இறந்து விட்டாயோ?

நம்பிய பேர்களை கைவிட்ட பணத்தை
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

கயிற்றில் ஆடும் வாழ்க்கை

டூம்..டூம்..டூம்
டூம்.. டூம்.. டூம்..
என்ற மேளத்தின் ஒலி
கேட்டுக் கொண்டே இருந்தது...