பிரதான செய்திகள்

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து- திருமாவுக்கு இலங்கையில் எதிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.
 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் க
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.

கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தகவல்களை மீட்பது எப்படி.?


நாம் அனைவருமே இண்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்புத் திறனை மட்டுமே கையாளுவதில்லை. தரவுகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவுகளுக்கும் ஏற்ற வண்ணம் நாம் நமது கருவிகளுக்கான மெமரி நீட்டிப்பு வசதி முறையான எஸ்டி அட்டைகளையும் (மெமரி கார்டு) பயன்படுத்திவருகிறோம். அப்படியான எஸ்டி கார்டை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

கக்கூஸ்’ - நம் முகத்தில் அறையும் ஆவணப்படம்


கக்கூஸ்’ என்று பெயர் மூலமாகவே நம் முகத்தில் அறைகிறது இந்த 115 நிமிட ஆவணப்பட ஆக்கம். நரகத்தையொத்த வாழ்க்கையைத் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்க நேர்ந்த ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்கள். அவர்கள் மீது வெறும் அனுதாபத்தை மட்டுமே எழுப்பிவிட்டு இருதுளி கண்ணீரைத் சிந்திச் செல்வது மட்டுமல்ல இது தரும் அனுபவம்.

தமிழர்கள் படிக்க வேண்டிய நூல் இலவசமாக...

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ... தமிழனுக்கு கொன்று ஒரு குணம் உண்டு என்று சிலேடைகள் முலம் பெருமை பேசும் நாம்.தமிழ் மொழிக்கு பெருமை சேர்ந்த தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் , உலக மொழிகளில் பழமையான மொழி,பலநாட்டு இலக்கிய ,இலக்கணங்களுக்கு முன்னோடியான மொழி என்ற பெருமையை தேடித்தந்தவரை நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. நாம் முன்னோர் எழுதி வைத்து சென்ற சங்க இல்லக்கிய பழமையான ஓலைச்சுவடிகளை  தேடி கண்டெடுத்து அவற்றை அச்சு பிரதிகளா பதிப்பித்தவர். ஓலைச்சுவடிகளை தேடி பஸ்,ரயில் போக்குவரத்து  இல்லாக காலங்களில் தமிழகம்முழுதும் தேடி அழைந்தவர்

ஈஷா ஆக்கிரமித்தது 109 ஏக்கர் குற்றவாளிக் கூண்டில் ஏறியது தமிழக அரசு


பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக் கப்படுகிற கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் 109 ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மையை, வேறுவழியின்றி தமிழகஅரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலத்தில் செயல்பட்டு வரும்ஈஷா மையத்தின் மிக பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்று சட்டவிரோதஆதிசிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடியும், அவருடன் விழாவில்பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக அரசே தன்னையும் அறியாமல் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.ஈஷா யோகா மையத்தால் 109 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவே ஈஷாமையம் சட்டவிரோதமானது என்பதைஅம்பலப்படுத்தும் விதத்தில் அமைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் இடைவிடாமல் அம்பலப்படுத்தி வந்தன.