பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

தேனில் விழுந்த தேமுதிக: பிரேமலதா

கண்ணாமுச்சி காட்டிய தமிழக கட்சிகள் ஒருவழியாக இல்லை இல்லை வேறுவழியில்லை தேர்தல் நெருங்கி விட்டதே...கூட்டணி முடிவு செய்து விட்டன,பிரச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கி விட்டது.
                         நேற்றுவரை விஜயகாந்த எங்கள் கூட்டணிக்கு தான் வரவேண்டும் என நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டிருந்த கட்சிகள் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டன.
                பழம் பாலில் விழுமா என காத்திருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சீசீசீ  இந்த பழம்  புளிக்கும் என்கிறார். நாக்குகை தொங்கப்போட்டு காத்திருந்த பாஜக மக்கள் நல கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்கிறது.ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா  பழம் நழுவி தேனில் விழுந்திருப்பாதாக  மதுரையில் பேசியிருக்கிறார்....

மறுபடியும் ‘பால் சொம்போடு’ காத்திருக்கும் கருணாநிதி...

தமிழகத்தில் வெயில் மண்டையை பிளக்கிறது.அதைவிட எந்த கட்சி யாரோடு கூட்டணி வைக்கும் என்பது தலை சுற்றுச்செய்யும் பரபரப்பு.கூட்டணி வைக்கிறதுல என்னதான் பிரச்சன? தமிழக கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு கொள்கை ,கோட்பாடு கிடையாது. அரசியல் நாகரீகமும் கிடையாது. பிறகு என்ன தான் பிரச்சனை பணம் எத்தனை கோடி, எத்தன சீட்டு,வியாபார ரீதியான சில பேச்சு வார்த்தைகள் இது தான். பொதுமக்கள பத்தி என்ன கவலை வேண்டியது இருக்கு?
                 அதிமுகவோடு கூட்டணி சேர பெரிய கட்சிகள் இல்லை .59 சாதி அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம்?
         பிஜே.பி நிலைமை பரிதாபம்...கூட்டு வைக்கவும் முடியல?கூட்டணி சேரவும் முடியல?

கடன் கட்டாத விஜய்மல்லையாவும் - ஏழை விவசாயியும்


அரை நிர்வாண அழகிகளோடு விஜய்மல்லையா எடுத்துக்கொண்ட   கிங் ஃபிஷர்  கலாண்டருக்களுக்கு   புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா?பார்க்கதாவர்கள்  கீழே படம் இணைத்துள்ளேன்
                கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் இரண்டு கடனாளிகளை பற்றி செய்திகள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன.ஒருவர்  விஜய்மல்லையா,மற்றொரு தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயி.
         10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அழகிகளோடு ஆட்டம் போட்டு மக்கள் வரிப்பணத்தை தன் தனிப்பட்ட உல்லாச வாழ்க்கைக்கு செலவிட்ட    விஜய் மல்லையா கோர்ட் சூட்டோடு பேட்டி கொடுக்கிறார்.
               3.80 லட்சம் கடன் வாங்கிய 2 தவணை மட்டுமே கட்டவேண்டிய விவசாயியை போலீஸ் அடித்து உதைத்து இழுத்துச்செல்கிறது.

முதல்வர் அம்மா சொன்ன கதையும் சொல்லாத கதையும்...

தமிழகத்தில் ஏறிவரும் வெயில் சூட்டின் வேகத்தை விட தேர்தல் சூடு அதிகரித்துவருகிறது. 2 மாதங்கள் அலைந்து திரிந்து பொதுமக்களுக்கு ஜஸ் வைத்தால் போதும் 5 வருடங்களுக்கு கவலையில்லை.பணம், குவாட்டர்,ஜாதி,மதம் இப்படி எதைவைத்தாவது ஒட்டு வாங்கிவிட  எந்த கொள்கையும் இல்லாத கூட்டணி கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
                       தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தெருதெருவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சாரத்தில் சமீபகாலமாக குட்டிக்கதை சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இன்றைய முதல்வர்,நேற்றைய முதல்வர் எல்லோரும் கதைகளை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. அனைத்தும் காணொலி காட்சிதான். சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்த போது தனது தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு மட்டும் சென்ற மக்களை சந்தித்ததார். மழையில் நனைந்து கொண்டிருந்த பொதுமக்களிடம் கூட குட்டிகதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை மக்கள் நல கூட்டணி (வைகோ தலைமையிலான கூட்டணி) கார்ர்   கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார்.