பிரதான செய்திகள்

பிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்

மோடி கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்ற பெயரில் தன் சொந்த பணத்தை எடுக்க பாமரமக்களை பாடாய்படுத்தி வருகிறார். பெரும் கருப்பு பண முதலைகள் சல்லாபித்திருக்க ஏழைகள் மட்டுமே துயரமடைகிறார்கள். இப்போது துல்லிய தாக்குதல் அடுத்ததாக வான்வழிதாக்குதல் தொடுத்திருக்கிறார்...
ரூபாய் நோட்டுகளை முற்றாக ஒழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களைஇன்னலுக்குள்ளாக்கிய பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். ஆனால் வெளியில் தனது சாதனை இதுவென்று மார்தட்டி வருகிறார்.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஞாயிறன்று அவர் உரையாற்றினார்.ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று நவம்பர் 8 ஆம்தேதி அறிவித்ததாகவும், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறிய அவர், இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும் என்றார்.ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.

பணத்தை எங்கே தேடுவேன்?


எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? 
பணத்தை எங்கே தேடுவேன்?

 மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

அன்றாடம் காட்சிகளை அலையவிடும் பணத்தை எங்கே தேடுவேன்?

அம்பானி அடுப்பறையில் புகைந்து விட்டாயோ?

அதானி கழிவறையில் கசங்கி விட்டாயோ?


பாஜக ஆபிசில் பதுங்கிவிட்டாயோ?

ஆர்எஸ்எஸ் ஆபிசில் அமுங்கி விட்டாயோ?

வரிசையில் நின்று மயங்கி விட்டாயோ?

வாழவழியின்றி இறந்து விட்டாயோ?

நம்பிய பேர்களை கைவிட்ட பணத்தை
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

இனி உங்கள் வருமானத்தை செலவழித்தே ஆக வேண்டும்!

மூட்டை மூட்டையாய் கட்டிப் பதுக்கி வைச்சிருக்கிறவனுக்கெல்லாம் இப்படித்தான்யா பாடம் புகட்டணும் என்று சிலஅறிவுஜீவிகளும், ‘தேசபக்திக்காரர்களும்’ சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கும், கறுப்புப் பண முதலைகளுக்கும், பெரும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவு யாரும் மறுக்கமுடியாத உறவாகும்.

சொந்த அரசியலைத்தாண்டிய இந்தப் பொருளாதார உறவுகள் நமது மக்களுக்குதெரியாத இரகசியங்களுமல்ல. அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உடனே அறிவிக்கப்பட்ட செயல் அல்ல 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள்செல்லாத அறிவிப்பு. கடந்த ஆறு மாதமாய் திட்டமிடப்பட்டது என இப்போது, தகவல் கசிகிறது எனில் என்ன அர்த்தம்? பெருமுதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் தங்களிடம் உள்ளபணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே அர்த்தம்.ஏனெனில், கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக்கொள்ள அந்நிய மூலதனம் என்ற பெயரில் ஆயிரத்தெட்டு வழிமுறைகளை அரசே சட்டப்படி செய்துதருகிறது எனும்போது, அதனை செய்துகொள்வதுதானே சுலபமானது.

நாசரின் ‘நச்’ கேள்வி

நடிகர் நாசரை பற்றி சொல்லவேண்டியதில்லை, நடிகர் சங்கத்தலைவர், சிறந்த குணச்சித்திர நடிகர். எந்த மாதரியான கதாபாத்திரமானலும் அதை தன் சிறப்பான நடிப்பு முலமாக நம் கண்முன் நிறுத்துபவர்.  திட்டிவாசல்  என்ற திரைப்படத்தின்  பாடல் வெளியிட்டு விழாவில் கேரவன் பயன்படுத்தும் பந்தா பண்ணும் நடிகர்களை பார்த்து நச் கேள்வி ஓன்றை கேட்டிருக்கிறார்.
வெளிப்புறப் படப்பிடிப்புகளின்போது இயக்குநர்கள், நாயக நடிகர் - நடிகையர் போன்றோர் பயன்படுத்தும் வாகனம் கேரவன் என்பது. அதில் சமயலறை, சாப்பிடுமிடம், படுக்கை, கழிவறை என எல்லா வசதிகளும் இருக்கும். கடும் வெயிலில் படப்பிடிப்பின் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சற்றே ஓய்வெடுக்கவும், உணவு அருந்தவும் இதனைப் பயன்படுத்துவார்கள். தயாரிப்பாளருக்கு ஒரு செலவினமாகக் கருதப்படும் இந்தக் கேரவன் என்பது அந்த வசதி தேவைப்படுவதாலா அல்லது அந்தஸ்தைக் காட்டிக்கொள்வதற்காகவா என்றொரு சரியான கேள்வியை முன்வைத்திருக்கிறார்