கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தன் ஆட்டைத்தை அதிகரித்தபடி செல்கிறது.பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் மரம்,பறவைகள்,செடிகள் நம்மைபார்த்து நீங்கள் அவ்வளவு தானா என கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அதுதான் கவிதை.
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா
விமானம் ,ராக்கெட்
கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவுதானா?
என பறவை கேட்டது...
கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவுதானா?
என பறவை கேட்டது...
உலகை பல முறை அழிக்கும்
அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவு தானா ?
என மரம் கேட்டது...
அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவு தானா ?
என மரம் கேட்டது...
எங்களை மரபணு மாற்றம்
செய்தீர்களே நீங்கள்
அவ்வளவு தானா ?
என காய்கறிகள் கேட்டது...
செய்தீர்களே நீங்கள்
அவ்வளவு தானா ?
என காய்கறிகள் கேட்டது...
நான் உயர்ந்தசாதிக்காரன்,
நான் பெரிய பணக்காரன்
என பீற்றிக்கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என காற்று கேட்டது...
நான் பெரிய பணக்காரன்
என பீற்றிக்கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என காற்று கேட்டது...
உலகை அளப்பிறந்தவர்கள்
நாங்கள் அழிவற்றவர்கள்
என தலைகனம் கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என டைனோசர் கேட்டது....
நாங்கள் அழிவற்றவர்கள்
என தலைகனம் கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என டைனோசர் கேட்டது....
இந்த பிரபஞ்சத்தில் எங்கும்
இல்லாத பரிணாமம்
நாங்கள் என்றீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என பூமி கேட்டது...
இல்லாத பரிணாமம்
நாங்கள் என்றீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என பூமி கேட்டது...
இந்த பூமிக்கு
நீங்கள் வந்து செல்லும்
விருந்தினர்கள் மட்டும்
நீங்கள் அவ்வளவுதான்
என்றது இயற்கை
நீங்கள் வந்து செல்லும்
விருந்தினர்கள் மட்டும்
நீங்கள் அவ்வளவுதான்
என்றது இயற்கை
அ.தமிழ்ச்செல்வன்
திருமங்கலம் -மதுரை

2 comments:
அருமையான வரிகள்
http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
உண்மை தான்... பலவற்றை சொல்லிக் கொடுக்கிறது... மனிதம் தழைக்க வேண்டும்...
Post a Comment