பிரதான செய்திகள்

ராம்குமார் - கொலை முதல் 'தற்கொலை' வரை...


ராம்குமார்  மரணம் தற்கொலையா?கொலையா? என்ற விவாதம்  பரபரப்பாக பேசப்படுகிறது.  அரசியல் தலைவர்கள் உட்பட  எல்லோருமே போலீஸ் ராம்குமாரை கொன்றுவிட்டதாகதான் நம்புகிறார்கள். இதற்கு காரணம் தமிழக காவல் நிலையங்களில் லாகப் மரணங்கள் அடிக்கடி நிகழகூடிய சம்பவமாகும். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்கள் கூட சந்தேக மரணம் அடைந்திருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று திரும்பிய பலர் அவமானத்தாலும்,பயத்தாலும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு.
      இவ்வளவு ஏன் தமிழத்தை பொருத்தவரை காவல்நிலையம் செல்வதையே அவமானமாக கருத்துகிற சுழ்நிலை தான் அதிகம்.  அங்கும் அப்படித்தான் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால் ,அல்லது சமூகத்தில் பெரிய மனிதர்கள்,பணம் உள்ளவர்களை மரியாதையாக நடத்தும் காவல்துறை,சாமானியர்களை அவமானப்படுத்தி ,மிரட்டி அனுப்புகிறது என்பது உண்மை தான்.

பொக்கிஷத்தை பாதுகாத்து வரும் வால்முளைத்த மர்ம மனிதர்கள்


700ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் உள்ளே கீழ் நோக்கி சென்றிடும் பாதாள சுரங்கத்தில் பாண்டிய மன்னர்களின் ஒட்டுமொத்த பொக்கிஷத்தை வால்முளைத்த மனிதர்கள் பாதுகாத்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமம் கூடக்கோவில்.இங்கு வசித்திடும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர்.கோவில்களுக்கும்,கல்விக்கூடங்களுக்கும் புகழ் பெற்று திகழந்திடும் கூடக்கோவில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் 12ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னரால் பல்லவர்களின் கட்டிடக்கலையம்சம் நிறைந்து காணப்படும் ஈஸ்வரன் கோவில் உள்ளது.மதுரைக்கு அருகில் கூடுதலாக ஒரு கலையம்சம் மிக்க கோவிலை கட்டுவதற்காக பாண்டிய மன்னரால் தேர்வு செய்யப்பட்ட இடமே தற்போது கூடக்கோவில் என்றழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.12ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த சோழர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி கி.பி.1251ம் ஆண்டில் பாண்டிய மன்னன்ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையம்பதியை கைப்பற்றி பாண்டியர் காலத்திற்கு மறுமலர்ச்சி கொடுத்துள்ளார்.அவரது காலத்தில் தான் தற்போது கூடக்கோவில் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.