பிரதான செய்திகள்
Showing posts with label ஜெயம்ரவி. Show all posts
Showing posts with label ஜெயம்ரவி. Show all posts

பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் முன் ...

 


கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது.

 கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

 

     நடிகர் எம்.ஜி.ஆர்.கமல்ஹாசன்  முயற்சித்து கைவிடப்பட்ட நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரஉள்ள இத்திரைப்படத்தை பார்க்கும் முன் இந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வீக்கி பீடியா உள்ளிட்ட பல இணைய தளங்களில் வந்துள்ள தகவல்களின் இணைப்பு கொடுத்துள்ளேன்..



 இணைப்புகளை கிளிக் செய்து பார்க்கலாம்...


1.வீக்கிபிடியா

 2.கதையை பிடிஎப் பாக டவுன்லோட் செய்ய

3.பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு

4.பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

5.பொன்னியின் செல்வன் கதை 

6.வீடியோவாக பார்க்க

7 வீடியோ




தனியொருவன் -அரவிந்த சாமியின் படம்..

நான் வார ம் ஒரு சினிமா பார்ப்பவன் . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல திரில்லர் படம் பார்த்த திருப்பதியான படமாக தனியொருவன்  அமைந்தது. படத்தின் ஹீரோவாக ஜெயம்ரவி இருந்தாலும் உண்மையில் தனியொருவன் அரவிந்த்சாமி தான் ஹீரோ.  ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். கடைசிவரை அலட்டக்கொள்ளமல் அவர் செய்யும் வில்லதனம் புதுசு. இப்படி ஒரு மிக அழகான வில்லன் இந்திய சினிமாவில் இல்லை எனலாம்.