பிரதான செய்திகள்

குழந்தைகளின் சித்ரவதைக்கூடம் ஈஷா மையம்

கடவுள நம்பலாம்... நான் தான் கடவுள்ன்னு சொல்றவன நம்பக்கூடாது...
             வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பேசும் வசனம் இது.
எத்தனதடவ பட்டாலும் ஜனங்க திருந்தமாட்டங்கபோல. எத்தனையோ சாமியார்கள்  பிடிபட்டு,பெண்கற்பழிப்பு, பணம் பதுக்கல், இப்படி எதெல்லாம் தப்பான காரியமோ அதெல்லாம் பண்றவங்கதான் இந்த சாமியாருங்க. ஒவ்வொரு சாமியாரும் விதவிதமா எமாத்துற ஆளுங்க.    ஈஷா  மையம் யோகா கத்துகொடுத்தல் மூலமா எமாத்துற டைப்.  கடைசியா வந்த சிவராத்திரிக்கு  அந்த சாமியார் போட்ட ஆட்டம் இருக்கே ,குடிகாரன் போட்ட ஆட்டத்தை விட கோவலம்....(வீடியோ இணைத்துள்ளேன்) ஈஷா மையத்தை பற்றி ஒருத்தர் புகார் கொடுத்தவுடன் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து புகார்கள் வர தொடங்கியுள்ளன. அதில் சில....

அடுத்த 24 மணி நேரத்தில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடியி மழையோ,அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
            இந்த அறிவிப்பை சமீபமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வானிலை வாசிப்பாளர் ஒருவர் மக்களிடயே பிரபலமான நபராக மாறிப்போனது வானிலை  அறிவிப்பும் ,அதை பற்றி விழிப்புணர்வும்முக்கியதுவம் பெறதுவங்கியதால் தான். ஒய்வு பெற்ற சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் வானிலை அறிவிக்கும் விதமே அவரை நாடறிந்த மனிதராக மாற்றியிருக்கிறது.
                    வானிலை ஆய்வுக்காக செயற்கைகோள்களை பூமியை சுற்றிவரச்செய்து அதன் மூலமாக கிடைக்கிற தகவலை,புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம், மழை வருமா?வந்தால் எப்ப வரும்? போன்ற தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன.இந்த அறிவிப்புகள் 80-90 சதவீதம் சரியாகவே இருக்கின்றன.
          வானிலையை மிக துல்லியமாக கணிப்பது சாத்தியமில்லை. நாம் பார்த்திருப்போம் ... மேகம் திரண்டு இடி மின்னல் துவங்கினாலும் சில சமயங்களில் மழை பெய்வதில்லை.மழை பெய்வதற்கு மேகம் மட்டும் போதாது. மேகத்தை மழையாக மாற்ற   காற்றின் ஈரப்பதம்,காற்றின் வேகம் உள்ளிட்ட பல காரணிகள் சரியாக அமைய வேண்டும்.