300 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி கிராமம் இங்கே 400 குடும்பங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்சமூக  மக்கள் வசி க்கி ன்றனர் இவர்கள் தங்கள் முன்னோர்கள் வழிவகுத்த திருமண முறையை கடந்த 300 வருடங்களாக பின்பற்றியும் வருகின்றனர் இங்கு நடந்த அந்த ஊரினை சேர்ந்த ஜெயபாலன், சிவசக்தி ஆகியோரது திருமணம் சமுதாய வழக்கப்படி ஊர் மந்தை வெளியில் கட்டாந்த் தரையில் நடந்தது. அருகேயுள்ள பெருமாள் கோவில் மலை பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலமரம், உசிலை மரக்குச்சிகள் மற்றும் இலை தழைகளை கொண்டு திருமணப்பந்தல் அமைத்திருந்தனர்
சொந்த பந்தங்கள் கூடியிருக்க உருமி மேளத்துடன் மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டினார் பின்பு முறைபடி கல்யானி குதிரையில் வலம் வந்து சமுதாய சடங்ககளுடன் மணப்பெண்ணை கரம்பிடித்தார்.
இருவீட்டார் குலப்பெருமைகளை வயதான பெண்கள் ராகத்துடன் பாடிய வண்ணம்மிருந்தனர் சமுதாய பெரியவர்கள், இளைஞர்கள் என மணமக்களை வாழ்த்தி அவர்களை மகிழ்விக்க  பாரம்பரிய நடமான தேவராட்டத்தை ஆடினர் தெரு முழுவதும் தேவராட்டம் ஆடியவாரே ஊர்வலமாக இருவரையும் அழைத்து சென்றனர்.

 திருமண செய்யும் முறைகுறித்த வீடியோ பதிவு...


 சமுதாயத்தில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமம் என்பதை உணர்த்துவதற்காக முன்னோர்கள் காட்டிய வழிகாட்டுதலின் படி திருமணங்களை நடத்துவதாகவும் வரும் சந்ததியரும் இப்ழக்கத்தையே நடைமுறைபடுத்துவோம் என்கின்றனர் இந்த ஊர்மக்கள். கோடிகணக்கில் பணம் செலவலித்து ஆடம்பர திருமணம் நடத்தும் இவ்வேளையில் தங்கள் கலாச்சாரத்தை மட்டுமே இந்த சமூக மக்கள் பெரிதாக எண்ணிவாழ்கின்றனர்.

தகவல்- புகைப்படங்கள்
தெய்வேந்திரன்   
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Vijay Periasamy said…
அருமையான தகவல் . நன்றி