பெருமாள் முருகன் செய்த மூன்று தவறுகள்.......

பெருமாள் முருகன் விவகாரம்.... இன்றைக்கு இந்திய அளவில் விவாதிக்கப்படும்  சர்சைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்திய அளவில் நாளிதழ்களில் தலையங்கம் எழுதுகிற அளவிற்கு பெருமாள் முருகன் விவகாரம்  பிரபலமாக மாறிவிட்டது.
        பெருமாள் முருகன் தமிழகத்தில் எழுத்தாளர்கள் அளவில் மட்டும் அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர். இன்று நாடறிந்த எழுத்தாளராக மாற்றிவிட்டார்கள் மதவாதிகளும், சாதி வெறியர்களும்.

        பெருமாள் முருகனுக்கு நடந்திருக்கும் கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும், நிகழ்ந்திராத ஒன்று. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுயமரியாதை இயக்கம் மலர்ந்த நம்முடைய தமிழ்நாட்டில் அதுவும் சாதி அமைப்புகளின் மிரட்டலுக்கு பயந்து எழுத்தாளர்கள் பேனாவை மூடி வைக்க துவங்கியுள்ளதும் நான் எழுதியது தவறு. மறந்துவிடுங்கள் என்னையும், என் குடும்பத்தையும் வாழ விடுங்கள்என்று தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனின் குரல் வருவது தமிழ் சமுதாயத்திற்கே வெட்கக்கேடு.

தினமலரின் தவறான பார்வை....

ஜனவரி 19ம்தேதியிட்ட தினமலரில் (திருச்சி பதிப்பு) ஒருஅபத்தமான தலையங்கம் எழுதியுள்ளது. பெருமாள் முருகனை உரைவிட்டே விரட்டியதையும்,அவரை மிரட்டி இனி எழுதமாட்டேன் என்று பணியவைத்ததையும்  சரியானது தான் என்றும். சாதிவெறியர்கள்,மதவெறியர்கள்
 சட்டம் அங்கீகரித்த வழியில்தான் போராடினார்கள்; வன்முறையில் அல்ல” என்று தினமலர் எழுதிவிட்டு அதோடு நிற்கவில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பெருமாள் முருகனுக்கு வக்காலத்து வாங்கும் பலர் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் என இழுத்துள்ளது தினமலர் ஏடு.
           தினமலர் நாளிதழ் எப்போது இப்படித்தான். மேலும் இந்தியாவில் மோடியின் ஆட்சியில் தான் கருத்துரிமை பாதிக்கப்படுகிறது. மாற்று கருத்துள்ள புத்தகங்களை எரிக்கிறார்கள். எழுத்தாளர்களை மிரட்டுகிறார்கள், முஸ்ஸிம்களை முறை தவறிப்பிறந்தவர்கள் என்கிறார் ஒரு அமைச்சர்.அமைச்சர்களும், முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரம் படைத்தவர்களும் இப்படி பேசும் போது வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து ரசிக்கிறார் பிரதமர்.மோடியின் ஆட்சியில் மதவாதிகள்  வேகமடைந்திருப்து கவலைக்குறியது.
  பெரியாரையும், அண்ணாவையும் வைத்து அரசியல் நடத்தும்  தமிழக கட்சியினர் வாய்மூடி மவுனியாக உள்ளனர்

 இதையும் படித்து பாருங்கள்

  1. தமுஎகச வழக்கு.....

 2.  தி இந்துவில்

 3. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 4,ஐபி.என் இதழில்

 5.பிஸினஸ் ஸ்டேன்டர்டு

பெருமாள் முருகன் செய்த தவறு என்ன?

      மாதொருபாகன்  நாவல் பிரச்சனைக்கு ,சாதி,மத பிரச்சனைகளுக்கு அப்பால் பெருமாள் முருகன் மீது அரசு நிர்வாகம் ,மாவட்ட நிர்வாகதின் நடவடிக்கைக்கு மூன்று காரணங்கள்  உள்ளன.சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் பெருமாள் முருகன். இவர் கல்விக் கொள்ளையை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரி சகாயத்தை ஆதரித்து புத்தகம் எழுதி யுள்ளார். இந்து மத அவதூறுக்கு அப்பாற்பட்டு இந்த மூன்றும் பெருமாள் முருகன் மீதான எதிர்ப்புக்கு காரணங்களாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்..

செல்வன்.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
tamilan said…
மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?



இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.


ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.


இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html
Anonymous said…
how to buy safe viagra online

[url=http://viagrapurchsaseua.com/]generic viagra online[/url]

cheap viagra

cost of viagra 100mg kzn