முதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்ன?

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி நாடு விடுதலைப் பெற்ற அந்த பொன்னான பொழு தில் உற்சாக பெருவெள்ளம் தேசமெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. சுதந்திரக் காற்றை சுவாசித்த மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி னார்கள். ஆனால் காந்தியின் மனம் மகிழ்ச்சி யடையவில்லை. மாறாக உழுத நிலம் போல அந்த ஆத்மாவின் இதயம் அழுது கொண்டி ருந்தது. விடுதலை பெற்ற தேசத்திற்கு நீங் கள் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்ட தற்கு “ஒன்றுமில்லை” என்றே அவர் பதி லளித்தார்.
காரணம் பிரிக்கப்பட்ட நாட்டின் எல்லைப் பகுதியில் மத வன்செயல்களின் காரணமாக ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவரை அப்போது ஒரு வெளிநாட்டுப் பத் திரிகையாளர் சந்திக்க வந்தார்.

அப்போது காந்தி மவுன விரதம் இருந்ததால் அவருடன் பேசவில்லை. பிரதமராக பொறுப்பேற்கும் நேருவுக்கு உங்களது பரிசு என்ன என்று கேட் டதற்கு, அவ்வளவு பெரிய நாட்டின் பிரதம ருக்கு பரிசளிக்கும் அளவுக்கு இந்த எளியவ னிடம் எதுவும் இல்லை என்று எழுதிக் காட்டி னார். ஏதாவது தரக்கூடாதா என்று கேட்ட தற்கு, நடந்துகொண்டிருந்த காந்தி மரத்திலி ருந்து உதிர்ந்து விழுந்துகிடந்த உலர்ந்த பூ ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். இப்போதைக்கு எனக்குக் கிடைத்தது இதுதான் என்று எழுதிக்காட்டினார் காந்தி. ஒரு துறவி போல நடந்து கொண்ட காந்தியின் செயல் கண்டு மனமுடைந்து அழுதார் அந்த பத்திரிகையாளர். ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்த பூ மீது விழுந்தது. அப்போது காந்தி, நன்றி நண்பரே, நான் ஒரு உயிரில்லாத பூவைத்தான் உங்களிடம் தந்தேன். உங்களது தூய்மையான கண்ணீர் அதற்கு உயிர் தந்துவிட்டது என்று எழுதிக்காட்டினார்.

தொகுப்பு 
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

சிறப்பான பரிசு...

இன்றைய நாளில் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்...
ஆம்.. சிறப்பான தருணம் அது...

"நான் ஒரு உயிரில்லாத பூவைத்தான் உங்களிடம் தந்தேன். உங்களது தூய்மையான கண்ணீர் அதற்கு உயிர் தந்துவிட்டது என்று எழுதிக்காட்டினார்."

படித்தேன்..மகிழ்ந்தேன்...பகிர்வினிற்கு மிக்க நன்றி.

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்