ஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்


கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பேசும் படம் திரைப்படம் சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவுக்குப் போகிறது..25 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம். கடந்த 1988-ம் ஆண்டு வெளியானது. கமல் ஹாஸனுடன் அமலா நடித்திருந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.படத்தில் காதாபாத்திரங்களுக்கு வசனம் கிடையாது. பிண்ணனி இசைமட்டுமே உண்டு. படத்தில் யாரும் பேசாவிட்டாலும் கூட படம் பேசும். சைகையிலேயே பேசி காதல் செய்யும் கமல்,அமலா, அரை டம்ளர் டீ கிளாஸில் நாணயங்களை போட்டு கிளாஸ் நிறைந்ததும் குடிக்கும் கமல்,

ஜஸ் கத்திகளை வைத்து கொலைசெய்ய அலையும் வில்லன்கள் என படத்தின் காதாபாத்திரங்களுக்கு வசனம் தேவைப்படமலேயே  நகைசுவையாக காட்சியை அமைத்திருப்பார்கள். இந்தப் படம் இந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும், தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும் வெளியானது    அன்றைக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் குவித்தது பேசும் படம். வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து இப்போது ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.கால் நூற்றாண்டு கழித்தும் பேசும் அளவுக்கு தரத்தில் சிறந்த படமாக பேசும் படம் திகழ்வதைத்தான் இது காட்டுகிறது
  

தொகுப்பு 
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

தகவல்களுக்கு நன்றி...
  • சாமிகளுக்கு சாவு உண்டா?...
    05.02.2014 - 4 Comments
    . உண்டு. கடவுள் நம்பிக்கையாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.கடவுள்கள் பிறக்கிற போது இறந்து போவதும்…
  • திரையுலகில்  மரியாதையின் அளவுகோல் என்ன? இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்
    15.06.2012 - 1 Comments
    திரையுலகத்தை பொறுத்தவரை முகத்துக்கு முன்னால் சிரிப்பதும்,  முதுகில் குத்துவதும், காலைவாரி விடுவதும்…
  • இறைவனை தேடுவது சுலபம்- நித்தயானந்தா மீண்டும் அழைக்கிறார்
    21.10.2011 - 1 Comments
    நித்தியானந்தா என்ற பெயர் கேட்டதும் பலான சீ.டி ஞாபத்திற்கு வருவது தவிர்க்க முடியாது தான்.அவரும் நடிகை…
  • செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க....
    13.10.2014 - 0 Comments
    உண்மைதான்... ஏதோ மதுரைய சுத்திகாட்டுற மாதிரி இருக்கே... . பொய்யில்லை உண்மை.இப்போ இந்தியாவோட மங்கள்யானை…
  • 28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....
    15.01.2015 - 2 Comments
    தமிழர்கள் தனித்துவமிக்க ஒரு இனம் என்பதை உணர்த்துகிற விழா பொங்கல்.இயற்கையுடன் இணைந்து தமிழர்கள் கொண்டாடும்…