பட்டப்படிப்பில் பெயிலான கேப்டன் தோனி


நம்ம இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி படிப்பில் கோட்டை விட்டுட்டார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் . தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்றுள்ளார்,இவ்வளவு திறமையான கேப்டனுக்கு படிப்பு வரவில்லை,இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி பட்டப்படிப்பில் தோல்வி அடைந்து விட்டார். ஆறு செமஸ்டர் தேர்வுகளில் அவர் தோல்வி அடைந்துள்ளார் என்று ஜீ செய்திகள் கூறுகின்றன. ராஞ்சியில் பிறந்த தோனி, டிஏவி பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்த பின், செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை மற்றும் செயலாளர் பணிச்செயல்கள் படிப்பில் இளங்கலை படித்து வருகிறார். தொடர்ந்து கிரிக்கெட் ஆடிவருவதால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருக்கு உதவிடும் வகையில் சில விதிகள் தளர்த்தப்பட்டன.
ஆனாலும் அவரால் தனது பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.அடுத்த செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணுங்க தோனி.... உங்களுக்கென்ன பெயிலானலும் வேலை கிடைக்கும், கோடி..கோடியா சம்பளம் கிடைக்கும். நாங்க தான்?....

-செல்வன்




உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இனி மேல் 'படிப்பு' தேவைப்படலாம்...!