ஆண்கள் அடிக்கடி டி.வி.சேனல் மாற்றுவது ஏன்?


ங்க வீட்டுல டி.வி ரிமோட் யார் கையில இருக்கு?.டி.வி ரிமோட் யார் கையில இருக்கோ அவங்க தான் அந்த வீட்டோட பவர்புல் ஆளு. எங்க வீட்டல என் மகள் கையில் தான் அதிக நேரம் இருக்கும். அடுத்து என் மனைவி, அடுத்து அம்மா, அடுத்து தான் என்னோட கைக்கு வரும். மனைவி,அம்மா  நாடகம் பார்பார்கள், ஆனா நான் நீயூஸ்சேன்ல்,டிஸ்கவரி, காமடி சேனல், ஆங்கில சேனல்கள் என் மாற்றி மாற்றி பார்பேன்.... இப்படி அடிக்கடி சேனல் மாற்ற காரணம் என்ன? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் புக் படிச்சேன் அதில் கிடைத்த சில தகவல்களை உங்களுக்காக....
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

சுஜாதா சொன்ன காரணங்கள் உண்மைதானா? நண்பர்களே...

- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அப்படியா? ஆச்சர்யமான சுஜாதா அவர்களின் அலசல். பகிர்தலுக்கு நன்றி செல்வன்.