பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம்: எம்.எஸ்.வி. பேட்டி


புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின்றன
தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண்ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில்  அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்துங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சில நேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்பனையில் நல்லது செய்யுங்கள்.

கேள்வி: எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்றோரின் பாடல்களுக்கு இசையமைத்தது பற்றி...

பதில்: நான் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிக்கு பாடல்களை உருவாக்கவில்லை. படத்தின் கேரக்டர்களுக்கு என்ன மெட்டு தேவையோ அதை போட்டு கொடுத்தேன். பொருத்தமான பாடல் வரிகளையும் அதில் சேர்த்தேன்.

கேள்வி: பழைய பாடல்களை போல் கருத்துள்ள பாடல்கள் இப்போது வருவது இல்லையே?

பதில்: அந்த காலத்து பாடல்களை போல் இப்போதும் போட முடியும். ஆனால் நிர்ப்பந்தப்படுத்தி இப்போது பாட்டு வாங்குவதால் அது போல் வருவதில்லை.

கேள்வி: இசை வல்லுனர்களை ஒரே இடத்தில் திரட்டி நேரடியாக இசையமைப்பது இப்போது இல்லையே?

பதில்: வசதி வரவர அசதிதான் அதற்கு காரணம். முன்பு உழைத்தோம். இப்போது மிஷின் வந்துவிட்டது. மிஷினே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
தொகுப்பு
சத்யஜித்ரே


எம்.எஸ்.வி.பாடல்களை
 இலவச டவுன்லோடு செய்ய 


உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

என்ன தான் ரீமிக்ஸ் செய்தாலும் ஒரிஜினல் பாட்டின் இனிமை போல் வருமா...?

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...