இந்தியர்களை ஒன்றிணைக்கும் “ஒன்லைன்“ ஆல்பம்


பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜார்ஜ் பீட்டர் உருவாக்கத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என் பதை மையக்கருவாக கொண்டு ஒன்லைன் என்ற இசை ஆல்பம் தயாராகி வருகிறது.
இந் த ஆல்பத்தில் நாட்டிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது குரலை பதிவு செய்ய உள்ளனர். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர் கூறுகையில், இந்தியாவில் பல்வேறு மொழியினர் இருந்தாலும் இந்தியன் என்ற
ஒரு சொல்லில் இணைந்திருக்கின்றனர். நாட்டுப்பற்று, சகோதரத்துவம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்லைன் இசை ஆல்பம் உருவாக உள்ளது.

இதில் திரையுலகை சேர்ந்த விக்ரம், மம்மூட்டி, மோகன்லால், விவேக் ஓபராய், அசின், பாவனா, பாடகர்கள் ஜேசுதாஸ், சித்ரா, உஷா உதூப், சங்கர் மகாதேவன் மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்த சாய்னா, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இணைந்து பாடுகின்றனர் என தெரிவிக் கின்றார்.
                    ஆல்பம் நல்ல விஷயம் தான், ஆனா உண்மையிலேயே இந்தியர்கள் ஒற்றுமையாதான் இருக்கிறார்களா,
 பக்கத்து மாநிலத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கூட கொடுக்க மனசு வரமாட்டேங்குது ,அல்பம் போட்டு என்ன பண்ண
- பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments